தமிழ்நாடு

“சென்னை ஐஐடி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைக்கூடம்”- IIT மாணவியின் பேஸ்புக் பதிவு!

ஐ.ஐ.டி மெட்ராஸ் கல்வி வளாகத்தில் குறிப்பாக மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு மற்றும் சாதிய உணர்வுகளால் நிரம்பியுள்ளது.

“சென்னை ஐஐடி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைக்கூடம்”- IIT மாணவியின் பேஸ்புக் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கடந்த 8ம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய குறிப்பில், தனது தற்கொலைக்கு உதவிப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் தான் காரணம் எனவும், அவர்கள் மதரீதியாக தவறாக பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து மாணவியின் மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்திட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், மாணவர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் நிறுவனக் கொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீபுக்கு ஆதரவாக சென்னை ஐ.ஐ.டி-யின் மானுடவியல் துறை ஆராய்ச்சி மாணவி அல்ஃபியா ஜோஸ் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்தப்பதிவில், “நான் ஒரு ஐ.ஐ.டி மெட்ராஸின் மாணவி. எனது கல்வி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை (இஸ்லாமிய வெறுப்பு) கடைபிடிக்கிறது.

நவம்பர் 8ம் தேதி ஐ.ஐ.டி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவள் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்கத் தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் குறித்தும் நான் அஞ்சுகிறேன்.

ஒட்டுமொத்த வளாகமும் இந்த பிரச்னையில் மாணவர்கள் மனநிலை, இயலாமை மற்றும் கோபம் குறித்து மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் புரிந்துகொள்ள முடியாத புள்ளி ஒன்று இருக்கிறது. (இவை கூட இவர்களின் திட்டமிட்ட பாதுகாப்பான நாடகமாக இருக்குமோ என்று நான் சந்தேகிக்கிறேன்) அந்தப் புள்ளி என்னவெனில் மாணவர்கள் அடையும் மன வேதனைகளுக்கான காரணம் தனிப்பட்டதல்ல, அவை திட்டமிட்டே கட்டமைக்கப்படுகின்றன.

இந்த கல்வி வளாகத்தில் ஏன் தற்கொலைகள் பொதுவானவையாக மாறிவிட்டன என்ற கேள்வியை நாம் கேட்கத் தவறிவிட்டோம் அதோடு தற்கொலைகள் ஒருபோதும் தனிப்பட்ட அல்லது சமூக அரசியலுக்கானது என்பதை உண்மையென ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம். மாணவர்கள் கல்வி சார்ந்து சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி இந்த ‘உயர்'கல்வி நிறுவனங்களை அடைவதற்கே தொடர்ந்து தங்களது ‘தகுதியை’ எல்லா கட்டங்களிலும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

“சென்னை ஐஐடி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைக்கூடம்”- IIT மாணவியின் பேஸ்புக் பதிவு!

இங்குள்ள முரண்பாடு என்னவெனில் பாத்திமாவின் தற்கொலையை சுருக்கி ஒரு மதம் சார்ந்த விஷயமாக்குவதின் மூலம் குறிப்பிட்ட குழுக்களுக்கான பிரச்னை போல சித்தரித்து பாத்திமாவின் தற்கொலை குறிப்புகளை வலுவிழக்கச் செய்வதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அனைவரும் வலியுறுத்த விரும்புவது பாரபட்சமற்ற, முறையான, நேர்மையான நீதி விசாரணை நடக்க வேண்டும் என்பதே.

சென்னை ஐ.ஐ.டி கல்வி வளாகத்தில் குறிப்பாக மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு மற்றும் சாதிய உணர்வுகளால் நிரம்பியுள்ளது. எங்கள் வகுப்பறைகளில் நிலவும் ஒவ்வொரு விவாதத்தின் முடிவிலும் பாகிஸ்தானை இழுப்பதும், முஸ்லிம் பெண்களின் அடையாளங்களை குறிப்பிடுவதாகவே அமையும்.

“சென்னை ஐஐடி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைக்கூடம்”- IIT மாணவியின் பேஸ்புக் பதிவு!

"பெருமளவு மக்கட்தொகை கொண்ட முஸ்லிம்களும் , கிருஸ்தவர்களும் ஏன் சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒப்பீட்டளவில் பிராமணர்கள் இரண்டு சதவிகிதமே இருக்கும்போது முஸ்லிம்களும் கிருஸ்துவர்களும் தான் சிறுபான்மையினரா.." என்ற கேள்வியை ஒரு முஸ்லிம் பெண் ஆய்வாளரை பார்த்து கேட்கிறார் எனது பேராசிரியர். பிராமணர்கள் சிறுபான்மையினராக இருக்க நினைப்பதென்பது அவர்களது பிராமணிய மனோநிலை.

அந்த பிராமணியம் தான் கல்வியை குறிப்பிட்டு பிராமணர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டுமென போதிக்கிற மனுதர்மத்தினை உயர்த்திப் பிடிக்கிறது. உயர்சாதி அல்லாத மாணவர்களது வருகை என்பது ஐ.ஐ.டி வளாகத்தில் சாதிய கவலையை அவர்களுக்கு உருவாக்குகிறது.

ஒரு முஸ்லிம் ஆய்வு மாணவர் சொல்கிறார் "முஸ்லிம் மாணவனாக இருப்பதினால் எனது ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு தொடர்ந்து பலகட்டங்களாக சரிபார்க்கப்பட்டது" , நான் தொடர்ந்து கல்விரீதியாக இது சரியானதுதான் என வாதிட்டேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு ஒரு மூத்த துறைத்தலைவர் என்னிடம் வந்து "நன்றாகத்தானே நிதி வருகிறது (Internship) , தலைப்பை மாற்றிவிட்டு வேறு வேலையை கவனிக்கலாமே" என்று சொன்னார்.

“சென்னை ஐஐடி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைக்கூடம்”- IIT மாணவியின் பேஸ்புக் பதிவு!

இந்த கல்வி வளாகம் இஸ்லாமிய வெறுப்பையும், சாதிய ஆதிக்கத்தையும் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க இன்னும் எத்தனை உதாரணங்கள் வேண்டும். (மன்னிக்கவும் கொலையுண்டவர் மீண்டு வந்து சொல்லும் வரை இஸ்லாமிய வெறுப்பு என்ற சொல்லை பயன்படுத்த முடியாது. ஆதலால் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் அறிஞர்கள் இன்று கூறியிருப்பது போல இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகள் என்று சொல்வது நாகரீகமாக இருக்கும்.

ஐ.ஐ.டி கல்வி வளாக மாணவர்களுக்கு பாத்திமா தற்கொலை செய்துகொண்டு ஆறு நாட்கள் கடந்துவிட்டன. இந்த தருணம் வரை ஒரு மாணவர் சமூகமாக அநீதிக்கெதிராக நான் ஒன்றிணையவில்லை. ஃபாத்திமாவின் நீதிக்காக மற்ற பல்கலைகழக மாணவர்கள் போராடுகையில் சென்னை ஐ.ஐ.டி மட்டும் அமைதியாக இருக்கிறது.

எந்த அமைப்பு ஃபாத்திமாவை கொன்றதோ அந்த அமைப்பினூடாக மௌனமாகவும், தந்திரமாகவும் கடந்து செல்ல இந்த வளாகத்தில் அனைவரும் காத்திருக்கிறார்கள். ஃபாத்திமாவிற்கு நீதி வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories