Tamilnadu

#LIVE | ராதாபுரம் : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெறுகிறது.

#LIVE | ராதாபுரம் : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
4 October 2019, 08:22 AM

ராதாபுரம் : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

4 October 2019, 07:55 AM

மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

#LIVE | ராதாபுரம் : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரையின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.

4 October 2019, 06:45 AM

தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்தது!

#LIVE | ராதாபுரம் : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : ராதாபுரம் தேர்தலில் பதிவான 1,508 தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்தது.

4 October 2019, 06:37 AM

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : வாக்கு எண்ணிக்கை சுமார் 4 மணி நேரம் நடைபெறும் எனத் தகவல்.

4 October 2019, 06:24 AM

தி.மு.க வேட்பாளர் அப்பாவு சார்பாக வாக்கு எண்ணும் மையத்தில் முகவராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளார்.

4 October 2019, 06:01 AM

மறு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

ராதாபுரம் தொகுதிக்கான மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

4 October 2019, 05:49 AM

சற்று நேரத்தில் உயர்நீதிமன்ற வளாகத்தில் மறு வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது.

4 October 2019, 05:38 AM

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு அதிகாரியாக சாய் சரவணன் நியமனம்.

4 October 2019, 05:35 AM

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தி.மு.க வேட்பாளர் அப்பாவு வருகை

4 October 2019, 04:29 AM

இன்று காலை 11.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்!

#LIVE | ராதாபுரம் : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
4 October 2019, 04:29 AM

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : தபால் ஓட்டுப் பெட்டிகள் மற்றும் 34 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

4 October 2019, 04:27 AM

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்காக தபால் ஓட்டு பெட்டிகள் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டன.

4 October 2019, 04:08 AM

ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., இன்பதுரை வெற்றி எதிர்த்து தி.மு.க வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரை தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

அதில், மறு எண்ணிக்கையின் போது செய்யும் வகையில் அந்த தொகுதியின் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், தபால் வாக்குகளையும் வரும் அக்டோபர் 4ம் தேதி உயர்நீதிமன்ற தலைமைப்பதிவாளரிடம் ஒப்படைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை இன்று தொடங்குகிறது.

banner

Related Stories

Related Stories