தமிழ்நாடு

பயிற்சி பெறச் செல்வதற்கு பணம் இல்லாமல் தவித்த வீரர்கள்... நிதி உதவி அளித்த உதயநிதி ஸ்டாலின்!

பயிற்சி பயணச் செலவுக்கு வசதியில்லாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

பயிற்சி பெறச் செல்வதற்கு பணம் இல்லாமல் தவித்த வீரர்கள்... நிதி உதவி அளித்த உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பயிற்சி பயணச் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.

தாய்லாந்தில் நடைபெற உள்ள தேசிய வீல் சேர் கூடைப்பந்தாட்ட போட்டிக்காக இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ், அருள் அகஸ்டஸ் மற்றும் ஜெகன்நாத் ஆகியோர்கள் தேர்வாகியுள்ளனர்.

மேலும் போட்டிக்குத் தேர்வான மூன்று பேரும் பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சி பெற உள்ளனர். வறுமையின் காரணமாகவும் பணப்பற்றாக்குறை காரணமாகவும் தேர்வான மூன்று பேரும் பயிற்சிக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

பயிற்சி பெறச் செல்வதற்கு பணம் இல்லாமல் தவித்த வீரர்கள்... நிதி உதவி அளித்த உதயநிதி ஸ்டாலின்!

இதனை அறிந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேசிய வீல் சேர் கூடைப்பந்தாட்ட போட்டிகளில் தேர்ச்சி பெற்ற ரமேஷ், அருள் அகஸ்டஸ் மற்றும் ஜெகன்நாதன் ஆகியோர் பஞ்சாப் சென்று பயிற்சி மேற்கொள்வதற்கான பயணச் செலவுக்காக நிதி உதவி வழங்கினார்.

பயணத்துக்கான நிதியை ஹெட் வே பவுண்டேஷன் சார்பில் ராகவி செந்தில் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது ஹெட் வே பவுண்டேஷனை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர் நவீந்தரன் ஆகியோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories