தமிழ்நாடு

ஆணவக் கொலைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா தமிழக அரசு ? - நீதிபதிகள் கேள்வி

ஆணவக்கொலை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆணவக் கொலைகளை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா தமிழக அரசு ? - நீதிபதிகள் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் ஆணவக் கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஆணவக் கொலைகள் தொடர்பாக பத்திரிகை செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, ஆணவக் கொலைகளைத் தடுப்பது மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், ஆணவக்கொலை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை. ஆணவக்கொலையைத் தடுக்கும் விழிப்புணர்வுக்காக தமிழக அரசு ஒரு துண்டுப் பிரசுரத்தை கூட வெளியிடவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், ஆணவக் கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்த உதவி ஐ.ஜி-யை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories