தமிழ்நாடு

சென்னைக்கு இன்று கனமழை நிச்சயம் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: உறுதி செய்த தமிழ்நாடு வெதர்மேன்

தமிழகத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 29% குறைவாக பொழிந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு இன்று கனமழை நிச்சயம் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: உறுதி செய்த தமிழ்நாடு வெதர்மேன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு இன்று கனமழை நிச்சயம் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: உறுதி செய்த தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இடைவெளிவிட்டு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 8 செ.மீ, காவேரிப்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், தற்போது கர்நாடக மாநிலத்தில் வலுவடைந்து காணப்படுகிறது என்ற கூறிய அவர், ஜூன் 1 முதல் இதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 81 மி.மீ. இது இயல்பைவிட 29% குறைவு எனவும் வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பதிவில், சென்னைக்கு வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இன்று சென்னையில் ஈரப்பதமான வானிலை நிலவும் எனவும் தனது பதிவில் வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories