தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? - தேர்தல் தேதியை அறிவிக்க உச்ச நீதிமன்றம் கெடு

அக்டோபர் 31-ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்கவேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? - தேர்தல் தேதியை அறிவிக்க உச்ச நீதிமன்றம் கெடு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு இதுவரை நடத்தவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே.எஸ்.சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.

அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், அக்டோபருக்குள் வார்டு மறுவரையறைக்கான பணிகள் நிறைவு பெறும் என உறுதி அளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.

banner

Related Stories

Related Stories