தமிழ்நாடு

நீலகிரியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை செயல்படுத்த ஆ.ராசா மனு!

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பங்கு அளப்பரியது என ஆ.ராசா தெரிவித்திருக்கிறார்.

நீலகிரியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை செயல்படுத்த ஆ.ராசா மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார் நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி. ஆ.ராசா.

அப்போது கோவையில் இருந்து நீலகிரிக்கு செல்லும் போக்குவரத்து திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அவற்றை செயல்படுத்தக் கோரி மனு அளித்தார்.

நீலகிரியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை செயல்படுத்த ஆ.ராசா மனு!

அந்த மனுவில் கோயமுத்தூர் முதல் சத்தியமங்கலம் (65 கிமீ) சாலை, கிழக்கு பைபாஸ் ரோடு (54 கிமீ), கோவை - கரூர் (114 கிமீ), L&T பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாலை போக்குவரத்து பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நீலகிரியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை செயல்படுத்த ஆ.ராசா மனு!

மேலும், 2024ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆகவே பொருளாதார மேம்பாட்டில் கோவை மாவட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் பங்கு இருக்கிறது.

வர்த்தக ரீதியில் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கோவை போன்ற பகுதிகளின் தரம் உயர்த்தப்படுவதின் மூலம் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது என்றும் ஆ.ராசா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் நிதின் கட்கரிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories