தமிழ்நாடு

தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் பல ஆயிரம் கோடிக்கு வணிகம் பாதிப்பு - விக்கிரமராஜா !

தண்ணீர் தட்டுப்பாட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் பல ஆயிரம் கோடிக்கு வணிகம் பாதிப்பு - விக்கிரமராஜா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், '' சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், சென்னை மக்களுக்கு ஆறு மாதத்திற்கு தண்ணீர் கட்டணத்தை அரசு வசூலிக்ககூடாது. பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் கிடைத்த பின்பு தான் அதற்கான தடையை விதிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சி கடைகளின் வாடைகைகளை குறைக்க வேண்டும். வணிகர்களுக்கு அரசு அதிகாரிகள் பல்வேறு வகையில் கொடுக்கும் நெருக்கடிகளை கண்டித்தும், வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும், தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு, வணிகர்களுக்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் '' என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories