தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம் தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கரூர், தருமபுரி, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை 31 முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories