தமிழ்நாடு

காவிரியில் இருந்து 19.5 டி.எம்.சி. நீரை திறக்க தமிழக அரசு வலியுறுத்தாது ஏன்? - வைகோ கேள்வி

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கான 19.5 டி.எம்.சி. நீரை அரசு கேட்காதது ஏன் என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரியில் இருந்து 19.5 டி.எம்.சி. நீரை திறக்க தமிழக அரசு வலியுறுத்தாது ஏன்? - வைகோ கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி. நீரை காவிரியில் இருந்து திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ஆதரவாக கருதப்பட்டது. ஆனால் இதற்கு கர்நாடக அரசோ இப்போதைக்கு தண்ணீர் வழங்க முடியாது என தடாலடியாக கைவிரித்திருக்கிறது.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், குறிப்பிட்டதாவது,

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கடந்த 15 ஆம் தேதி நான் அறிக்கை விடுத்திருந்தேன்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம், டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தின் சார்பாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர் அளித்த பேட்டியில், “காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்னைகளை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் காவிரியில் 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரியில் இருந்து 19.5 டி.எம்.சி. நீரை திறக்க தமிழக அரசு வலியுறுத்தாது ஏன்? - வைகோ கேள்வி

காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், கர்நாடகாவிலிருந்து காவிரியில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்? என்று கூறி இருக்கிறார்.

மேலும், கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு, தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறவிலல்லை. தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது, கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று. கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது.

காவிரியில் இருந்து 19.5 டி.எம்.சி. நீரை திறக்க தமிழக அரசு வலியுறுத்தாது ஏன்? - வைகோ கேள்வி

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் தமிழகத்திற்கு 19.5 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தாதது ஏன்?

கர்நாடக மாநிலம் வழக்கம்போல் அணைகளில் தண்ணீர் இல்லை என்று திரும்பத்திரும்ப பொய் கூறி வருவதை ஏற்க முடியாது.

மேட்டுர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதற்கு முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், குறுவைச் சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர்த் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

banner

Related Stories

Related Stories