தமிழ்நாடு

செல்போன் பேசிக்கொண்டே 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவி !

சென்னை அயனாவரம் அருகே 3-வது மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த மாணவி தீடிரென கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

செல்போன் பேசிக்கொண்டே 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை அயனாவரத்தில் ராம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.அவரது மகள் தீபிகா. அவர் நேற்று தனது வீட்டு மாடியில் இருந்து இரவு செல்போனில் பேசியுள்ளார்.

அப்போது நிலை தடுமாறி 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மாணவியை பெற்றோர் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories