தமிழ்நாடு

சென்னையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை அரசோ அல்லது தனியார் நிறுவனமோ நடத்திட முன்வரவேண்டும் என பல்லாவரத்தில் 100க்கும் மேற்பட்ட ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்.

சென்னையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

25 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமிபத்தில் நஷ்டத்தில் உள்ளதாக கூறி விமானசேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இதனால் விமானங்கள் இயங்கவில்லை. அதனால் நாடு முழுவம் விமானிகள், பணிப்பெண்கள், பொறியளர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் பணிபுரியும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் மும்பை மற்றும் நாட்டின் பல இடங்களில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

banner

Related Stories

Related Stories