தமிழ்நாடு

அவிநாசி அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கேரள சிறப்பு புலனாய்வு போலிசார் கொச்சினில் இருந்து ஹைதராபாத் செல்லும் வழியில் அவிநாசி அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி.

அவிநாசி அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் 20 வயது பெண் காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நான்கு பேர் பெண்ணின் உறவினர்கள் இருவரை அழைத்துக் கொண்டு ஹைதராபாத் செல்லும் வழியில் அவிநாசி அருகே ஆலம்பாளையம் பகுதியில் மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பெண்ணின் உறவினர் ஹரி நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு உறவினர் வினு கோபால், போலிசார் ராஜேஷ், விநாயகம், அருண, அனில்குமார் என 5 பேரும் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அவிநாசி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories