தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் மோதல் : போலீசார் குவிப்பு !

மதுரை மத்திய சிறையில் போலீஸ் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. 

மதுரை மத்திய சிறையில்  மோதல் : போலீசார் குவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மதுரை மத்திய சிறையில் போலீஸ் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் கைதிகள் சிலர் காயம் அடைந்ததாக தகவல் கூறப்படுகிறது. மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோர் சிறை வாசலில் குவிப்பு. மதுரை மத்திய சிறைக்கு செல்லும் சாலையில் போலீசார் போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு அதிகரித்துள்ளனர். கைதிகள் கற்களைக் கொண்டு வீசுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் போலீசை எதிர்த்து கைதிகள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி, சட்டைகளை களைந்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகளை கீழே இறங்கும்படி கூறி அவர்களிடம் காவல் துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர். கைதிகளின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

banner

Related Stories

Related Stories