விளையாட்டு

MIvsGT : ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கிண்டல் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா - நடந்தது என்ன ?

குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MIvsGT  : ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கிண்டல் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா - நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழலில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

MIvsGT  : ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கிண்டல் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா - நடந்தது என்ன ?

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டி தொடங்கும் நேரத்தில், ஒலிபெருக்கியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் பூ என கிண்டல் செய்யும் விதமாக கோஷமெழுப்பினர்.

அடுத்ததாக குஜராத் அணி பேட்டிங் செய்திகொண்டிருந்தபோது மைதானத்தில் ஒரு நாய் குறுக்கிட்டு ஓடியது. அப்போது ரசிகர்கள் ஹர்திக் என கோஷமெழுப்பினர். மேலும், மைதானத்தில் ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியாவால் அவமதிக்கப்பட்டார் என்றும் கூறி வீடியோகளை வைரல் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற இது போன்ற சம்பவங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

banner

Related Stories

Related Stories