விளையாட்டு

”நிறைய திறமை இருக்கிறது, ஆனால் அவசரப்படுகிறார்” - இந்திய வீரரை விமர்சித்த பாக். முன்னாள் வீரர் !

இந்திய வீரர் கில் தன்னிடம் உள்ள திறமைக்கு குறைவாக ஆடி வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

”நிறைய திறமை இருக்கிறது, ஆனால் அவசரப்படுகிறார்” - இந்திய வீரரை விமர்சித்த பாக். முன்னாள் வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக இளம்வீரர் சுப்மான் கில் உருவாகியுள்ளார். கவாஸ்கர்,சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறப்பாக ஒரு மட்டைவீச்சாளரை இந்தியா தொடர்ந்து உருவாகிவரும் நிலையில், கோலிக்கு பின்னர் அந்த இடத்துக்கு வருவது யார் என்ற கேள்வி எழுந்தது.

தற்போதைய நிலையில், கோலிக்கு பின் இந்திய மட்டைவீச்சை வழிநடத்துபவராக சுப்மான் கில் இருப்பார் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

”நிறைய திறமை இருக்கிறது, ஆனால் அவசரப்படுகிறார்” - இந்திய வீரரை விமர்சித்த பாக். முன்னாள் வீரர் !

எனினும் சமீபத்திய சில போட்டிகளில் அவர் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கூட குறைந்த ரன்கள் அடித்ததால் அடுத்த போட்டியில் அணியில் அவருக்கு பதில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கில் தன்னிடம் உள்ள திறமைக்கு குறைவாக ஆடி வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ”கில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர், அவரிடம் நல்ல திறமை இருக்கிறது. ஆனால் திறமையை அனைத்தையும் உடனே காட்ட வேண்டும் என்று நினைத்து தேவையில்லாத ஷாட் அடி ஆட்டமிழந்து விடுகிறார்.

முன்பு அவர் அந்த தவறை செய்யவில்லை. ஆனால் இப்போது அதனை செய்கிறார். எந்த ஸ்பெஷல் ஷார்ட்டும் ஆடாமல் தொடர்ந்து பேட்டிங் செய்தாலே ரன்கள் கிடைக்கும். ஒவ்வொரு பந்திற்கும் எப்படி விளையாட வேண்டும் என புரிந்து ஆட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories