விளையாட்டு

50 ரன்களுக்கு ஆல்-அவுட்டான இலங்கை.. 7 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து ஆசியக் கோப்பையை வென்ற இந்தியா !

இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பையை 8-வது முறையாக இந்திய அணி கைப்பற்றியது.

50 ரன்களுக்கு ஆல்-அவுட்டான இலங்கை.. 7 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து ஆசியக் கோப்பையை வென்ற இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்தித்தது இந்திய அணி. அந்த போட்டியில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்க வந்தநிலையில், மழை பெய்து ஆட்டம் தொடரமுடியாத காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் அடுத்து நடைபெற்ற போட்டியில் நேபாள அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றிபெற்றது.

50 ரன்களுக்கு ஆல்-அவுட்டான இலங்கை.. 7 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து ஆசியக் கோப்பையை வென்ற இந்தியா !

தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், 6 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. எனினும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், அந்த அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் பும்ரா விக்கெட் வீழ்த்திய நிலையில், இரண்டாவது ஓவரில் சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் நம்பிக்கையை அங்கேயே முடிவுக்கு கொண்டு வந்தார்.

50 ரன்களுக்கு ஆல்-அவுட்டான இலங்கை.. 7 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து ஆசியக் கோப்பையை வென்ற இந்தியா !

பின்னர் 4-வது ஓவரில் சிராஜ் அடுத்த விக்கெட்டை வீழ்த்த 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. அதன் பின்னரும் தொடர்ந்து இந்திய வீரர்கள் அசத்த இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 51 ரன்கள் இலக்கோடு ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் கில் ஆகியோர் அதிரடி தொடக்கம் தந்தனர். இதனால் இந்திய அணி 6.1 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்று ஆசிய கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றியது.

banner

Related Stories

Related Stories