விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : புள்ளிப்பட்டியலில் முதலிடம்.. அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்தியா !

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இந்தியா 3- 2 என்ற கணக்கில் கொரிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : புள்ளிப்பட்டியலில் முதலிடம்.. அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விளையாட்டுக்கு புகழ் பெற்ற சென்னையில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் தவிர பிற முக்கிய சர்வதேச போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முயற்சியால் 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக பல்வேறு நாடுகளின் வீரர்கள் சென்னை வந்த நிலையில், முதல் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், இந்தியா, கொரியா அணியை எதிர்கொண்டது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : புள்ளிப்பட்டியலில் முதலிடம்.. அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்தியா !

இதில் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா வீரர்கள் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன்பீரித், மந்தீப் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். இதன் மூலம் இந்தியா 3- 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

அதோடு மற்றொரு போட்டியில், பாகிஸ்தான் அணி சீனாவை 2- 1 கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடக்கம் முதல் விறுவிறுப்பாக சென்ற போட்டியில், 2வது பகுதியில் பாகிஸ்தான் ஒரு கோல் அடிக்க, 3வது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2- 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

banner

Related Stories

Related Stories