விளையாட்டு

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பு.. இந்தியாவை மறைமுகமான விமர்சித்து வெளியான பாக். அரசின் அறிக்கை !

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க அந்நாட்டு அணியை அனுப்புவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பு.. இந்தியாவை மறைமுகமான விமர்சித்து வெளியான பாக். அரசின் அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.இதனிடையே 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பு.. இந்தியாவை மறைமுகமான விமர்சித்து வெளியான பாக். அரசின் அறிக்கை !

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டு இது தொடர்பான அறிக்கையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது.

ஆனால், இதனையும் பிசிசிஐ ஒப்புக்கொள்ளாமல் ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் அல்லாது பொதுவான இடத்தில் நடத்த கோரிக்கை விடுத்தது. இதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள வாரியங்கள் ஒப்புக்கொண்ட நிலையில், இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தானில் சில போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஒப்புக்கொள்ள வேறு வழியின்றி அதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது.

இதன் காரணமாக விரைவில் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டு அதில் ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன. அதிலும் இந்திய அணி மோதும் போட்டிகள் அணைத்தும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது.

முன்னதாக உலகக்கோப்பை அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், அதில் பாகிஸ்தான் பங்கேற்பு குறித்து அந்நாட்டு அரசுதான் முடிவு செய்யும் என்றும், பாகிஸ்தான் வாரியம் தெரிவித்தது. மேலும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சார்பில் குழுவும் அமைக்கப்பட்டு அது ஆய்வு செய்யப்பட்டது.

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பு.. இந்தியாவை மறைமுகமான விமர்சித்து வெளியான பாக். அரசின் அறிக்கை !

அதனைத் தொடர்ந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க அந்நாட்டு அணியை அனுப்புவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் “விளையாட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது என்பதை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, வரவிருக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்று விளையாட பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. மேலும் இந்தியாவுடனான இருநாட்டு உறவுகளின் நிலை, அதன் சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக்கூடாது என்பதையும் பாகிஸ்தான் மதிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பாகிஸ்தான் இந்தியாவையும் மறைமுகமாக சாடியுள்ளது. தாங்கள் அரசியலை பார்க்காமல் இந்தியாவுக்கு அணியை அனுப்புகிறோம் என்றும், ஆனால் இந்தியா விளையாட்டை விட அரசியலை அதிகம் பார்க்கிறது என்றும் மறைமுகமாக இந்திய அரசையும், பிசிசிஐ-யையும் பாகிஸ்தான் அரசு விமர்சித்துள்ளதாக விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories