விளையாட்டு

உலகின் மதிப்புமிக்க வீரர்.. எம்பாப்பேக்காக போட்டி போடும் முன்னணி கிளப்கள்.. களத்தில் இறங்கிய LIVERPOOL!

பிரபல இங்கிலாந்து கால்பந்து அணியான லிவர்பூர் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்வதில் தீவிரமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகின் மதிப்புமிக்க வீரர்.. எம்பாப்பேக்காக போட்டி போடும் முன்னணி கிளப்கள்.. களத்தில் இறங்கிய LIVERPOOL!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த இறுதி போட்டியில் வென்ற மெஸ்ஸி உலகளவில் கொண்டாடப்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஹட் ட்ரிக் கோல் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருதை வென்ற கைலியன் எம்பாப்பே அதிகம் கவனிக்கப்பட்டார். மெஸ்ஸி -ரொனால்டோவின் காலத்துக்கு பின் அடுத்த உலக சூப்பர் ஸ்டாராக கைலியன் எம்பாப்பே வருவார் என கால்பந்து வல்லுநர்கள் முத்திரை குத்தினர்.

உலகின் மதிப்புமிக்க வீரர்.. எம்பாப்பேக்காக போட்டி போடும் முன்னணி கிளப்கள்.. களத்தில் இறங்கிய LIVERPOOL!

தற்போது 24 வயதாகும் கைலியன் எம்பாப்பே ஏற்கனவே 2018-ம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். மேலும் மிக இளவயதான எம்பாப்பேயை பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தும் அதிரவைத்தது.

தற்போதைய நிலையில் உலகின் அதிக மதிப்பு மிக்க வீரராக இருக்கும் கைலியன் எம்பாப்பே பிரான்சின் புகழ்பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(PSG ) அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் கிளப்போடு அடுத்த ஆண்டோடு ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில், அவர் அந்த அணியில் தொடருவாரா அல்லது வேறு அணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே சவூதியில் உள்ள அல் ஹிலால் கிளப் அணி வருடத்துக்கு ரூ.2700 கோடிக்கு எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய முன்வந்ததாக தகவல் வெளிவந்தது. எனினும் சவூதிக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், அல் ஹிலால் கிளப் அணி நிர்வாகிகளை எம்பாப்பே சந்திக்க விரும்பவில்லை என கூறியதாகவும் கூறப்பட்டது.

உலகின் மதிப்புமிக்க வீரர்.. எம்பாப்பேக்காக போட்டி போடும் முன்னணி கிளப்கள்.. களத்தில் இறங்கிய LIVERPOOL!

இதனிடையே தற்போது பிரபல இங்கிலாந்து கால்பந்து அணியான லிவர்பூர் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்வதில் தீவிரமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்காக 200 மில்லியன் யூரோவை (இந்திய மதிப்பில் ரூ. 1,815 கோடி) ஆண்டுக்கு கொடுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் இந்திய மதிப்பில் ரூ.1,500 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்து பின்னர் அது நிறைவேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இன்னும் ஒரு வாரத்தில் எந்த அணியும் PSG- க்கு பெரும் தொகை கொடுத்து எம்பாப்பேயை வாங்க முன்வராவிட்டால் அவர் அடுத்த ஆண்டும் PSG அணியிலேயே விளையாடவேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை PSG அணியில் தொடர்ந்து விளையாட எம்பாப்பே விரும்பவில்லை என்றால் அவர் அடுத்த ஆண்டு எந்த கிளப் கால்பந்து போட்டிகளிலும் விளையாடமுடியாத நிலையும் ஏற்படும் என்ற தகவல் கால்பந்து ரசிகர்களை அதிச்சியடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories