விளையாட்டு

ஒரு ஆண்டு விளையாட முடியாத நிலை? -கிளப்புடனான மோதலால் பிரபல கால்பந்து வீரர் எம்பாப்பேவுக்கு நேர்ந்த சோகம்!

பிரபல கால்பந்து வீரர் எம்பாப்பேவுக்கும் PSG அணி நிர்வாகத்துக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு அவர் அடுத்த ஆண்டு விளையாடவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு ஆண்டு விளையாட முடியாத நிலை? -கிளப்புடனான மோதலால் பிரபல கால்பந்து வீரர் எம்பாப்பேவுக்கு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த இறுதி போட்டியில் வென்ற மெஸ்ஸி உலகளவில் கொண்டாடப்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஹட் ட்ரிக் கோல் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருதை வென்ற கைலியன் எம்பாப்பே அதிகம் கவனிக்கப்பட்டார். மெஸ்ஸி -ரொனால்டோவின் காலத்துக்கு பின் அடுத்த உலக சூப்பர் ஸ்டாராக கைலியன் எம்பாப்பே வருவார் என கால்பந்து வல்லுநர்கள் முத்திரை குத்தினர்.

ஒரு ஆண்டு விளையாட முடியாத நிலை? -கிளப்புடனான மோதலால் பிரபல கால்பந்து வீரர் எம்பாப்பேவுக்கு நேர்ந்த சோகம்!

தற்போது 24 வயதாகும் கைலியன் எம்பாப்பே ஏற்கனவே 2018-ம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். மேலும் மிக இளவயதான எம்பாப்பேயை பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தும் அதிரவைத்தது.

தற்போதைய நிலையில் உலகின் அதிக மதிப்பு மிக்க வீரராக இருக்கும் கைலியன் எம்பாப்பே பிரான்சின் புகழ்பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(PSG ) அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், தற்போது அவருக்கும் PSG அணி நிர்வாகத்துக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு அவர் அடுத்த ஆண்டு விளையாடவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

PSG அணியுடன் அடுத்த ஆண்டுவரை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எம்பாப்பே, திடீரென இந்த ஆண்டே கிளப்பில் இருந்து வெளியேற விரும்புவதாகவும், அந்த அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கப்போவதில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்தார். இதனால் அவர் பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடுவார் என கூறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதற்கு மேல் யாரையும் வாங்க விரும்பவில்லை என அறிவித்தது.

ஒரு ஆண்டு விளையாட முடியாத நிலை? -கிளப்புடனான மோதலால் பிரபல கால்பந்து வீரர் எம்பாப்பேவுக்கு நேர்ந்த சோகம்!

மேலும், எம்பாப்பேயை வாங்கும் அளவு தற்போது வேறு எந்த அணிக்கும் நிதிநிலை இல்லை என கூறப்பட்ட நிலையில், PSG தலைவர் நாசர் அல்-கலாஃபி எம்பாப்பே அணியில் தொடர்வது குறித்து இன்னும் இரண்டு வாரத்துக்குள் முடிவு செய்யாவிட்டால் அவர் வெளியேறலாம் என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். இன்னும் இரண்டு வாரத்தில் எந்த அணியும் PSG- க்கு பெரும் தொகை கொடுத்து எம்பாப்பேயை வாங்க முன்வராவிட்டால் அவர் அடுத்த ஆண்டும் PSG அணியிலேயே விளையாடவேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை PSG அணியில் தொடர்ந்து விளையாட எம்பாப்பே விரும்பவில்லை என்றால் அவர் அடுத்த ஆண்டு எந்த கிளப் கால்பந்து போட்டிகளிலும் விளையாடமுடியாத நிலையும் ஏற்படும். இந்த தகவல் கால்பந்து ரசிகர்களை அதிச்சியடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories