விளையாட்டு

"தோனி இதை எப்படி செய்தார் ? அதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது" -முன்னாள் வீரர் வியப்பு !

ஒரு போர் வீரனுக்குடைய மனவலிமை தோனியிடம் இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

"தோனி இதை எப்படி செய்தார் ? அதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது" -முன்னாள் வீரர் வியப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

"தோனி இதை எப்படி செய்தார் ? அதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது" -முன்னாள் வீரர் வியப்பு !

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்பட்டதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்தனர்.

"தோனி இதை எப்படி செய்தார் ? அதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது" -முன்னாள் வீரர் வியப்பு !

அதே நேரம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய பின்னர் தோனி உடல்நலம் ஒத்துழைத்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். இந்த தொடரில் அவரின் முட்டு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து அனைத்து போட்டியிலும் அணிக்காக விளையாடி தோனி அசத்தியிருந்தார். மேலும், ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னரே தனது இந்த காயத்துக்காக மும்பையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில், ஒரு போர் வீரனுக்குடைய மனவலிமை தோனியிடம் இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "தோனி ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று கேள்விப்பட்டேன்.இந்த சீசன் முழுவதுமே தனது வலியை கூட பொருட்படுத்தாமல் தோனி அவரது அணியை தாங்கிப் பிடித்திருக்கிறார். வலியை பொறுத்துக்கொண்டு அணிக்காக ஆடியுள்ளார்.

இந்த வலியை தாங்கிக் கொண்டு அவரால் சிஎஸ்கே அணியை ஒரு சீசன் முழுவதும் சிறப்பாக வழிநடத்த முடிந்தது என்று நினைத்தாலே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி தோனி சென்னை அணிக்காக கொடுத்துள்ள அர்ப்பணிப்பு ஒரு போர் வீரனுக்குடைய மனவலிமை அவரிடம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories