விளையாட்டு

IPL இறுதிப்போட்டி.. BCCI செயலாளர் ஜெய் ஷாவின் அருவருப்பான செய்கையால் அதிர்ச்சி.. நெட்டிசன்கள் விமர்சனம் !

ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா அங்கிருந்த ஒருவரை பார்த்து அருவருப்பான செய்கை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

IPL இறுதிப்போட்டி.. BCCI செயலாளர் ஜெய் ஷாவின் அருவருப்பான செய்கையால் அதிர்ச்சி.. நெட்டிசன்கள் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் குஜராத் அணியும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னேறின. இறுதிப்போட்டி கடந்த 28ஆம் தேதி விளையாடுவதாக இருந்த நிலையில், அகமதாபாத் மைதானத்தில் அன்றைய தினம் முழுவதும் மழை பெய்ததால் போட்டி அடுத்த நாளுக்கு மாற்றி வைக்கப்பட்டது.

அதன்படி நேற்று போட்டி நடைபெற்ற நிலையில், டாஸ் வென்று சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்ய, குஜராத் அணி களமிறங்கியது. கில் தோனியின் அபார ஸ்டம்பிங்கில் கில் ஆட்டமிழக்க அதன்பின்னர் ஜோடி சேர்ந்த சாஹா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரின் அதிரடியால் குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 214 ரன்களை குவித்தது. அதிலும் ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்த தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்ஷன் இறுதிக்கட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். சதமடிப்பார் என் எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவர் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

IPL இறுதிப்போட்டி.. BCCI செயலாளர் ஜெய் ஷாவின் அருவருப்பான செய்கையால் அதிர்ச்சி.. நெட்டிசன்கள் விமர்சனம் !

தொடர்ந்து 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 4 ரன்கள் இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. மழை நின்ற பிறகு மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் 15 ஓவர்களாக போட்டி குறைக்கப்படுவதாக தெரிவித்தனர். அதோடு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் என்ற இலக்குடன் வெற்றியை நோக்கி களமிறங்கியது சென்னை அணி. தொடக்க வீரர்கள் கெய்க்வாட், கான்வே சிறப்பான தொடக்கத்தை கட்டமைத்து, பவர் பிளேயில் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஆனால், நூர் அஹமது வீசிய ஒரே ஒவரில் கெய்க்வாட், கான்வே அடுத்தடுத்து ஆட்டமிழக்க ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வந்த துபே , ரஹானே, ராயுடு போன்ற வீரர்கள் தங்கள் பங்குக்கு சிக்சர், பவுண்டரி விளாசி சரிவிலிருந்து அணியை மீட்டு வெற்றிப் பாதையை நோக்கி அழைத்து சென்றனர்.

இறுதியில் 6 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவை என்ற சூழலில் மோஹித் சர்மா முதல் 4 பந்துகளை யார்க்கராக வீச அதில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. மொஹித் சர்மா வீசிய 5வது பந்தை ஜடேஜா சிக்சரை நோக்கி பறக்க விட்டார். தொடர்ந்து கடைசி பந்துக்கு 4 ரன்கள் தேவைபட்ட நிலையில், அந்த பந்தை ஜடேஜா 4 ரன்கள் விளாச 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.

இதனிடையே இறுதி ஓவரின் முதல் 4 பந்தை மோஹித் சர்மா சிறப்பாக வீசிய நிலையில், அணியில் வெற்றிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் குஜராத் அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். அப்போது பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐ-யின் செயலாளருமான ஜெய் ஷா அங்கிருந்த ஒருவரை பார்த்து அருவருப்பான செய்கை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் அந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன .

banner

Related Stories

Related Stories