விளையாட்டு

”நாங்கள் குற்றவாளிகளைப்போல நடத்தப்படுகிறோம், எங்களை உளவுபார்க்கிறார்கள்” -ஒலிம்பிக் நாயகன் குற்றச்சாட்டு!

எங்களின் தொலைபேசி எண்கள் உளவுபார்க்கப்படுகின்றன. எங்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள் என ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா குற்றம் சாட்டியுள்ளார்.

”நாங்கள் குற்றவாளிகளைப்போல நடத்தப்படுகிறோம், எங்களை உளவுபார்க்கிறார்கள்” -ஒலிம்பிக் நாயகன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார்.இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

”நாங்கள் குற்றவாளிகளைப்போல நடத்தப்படுகிறோம், எங்களை உளவுபார்க்கிறார்கள்” -ஒலிம்பிக் நாயகன் குற்றச்சாட்டு!

அதன் தொடர்ச்சியாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த போராட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மல்யுத்த வீராங்கனைகள் சம்மதம் தெரிவித்தனர்.

மேலும், பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீதான புகார் குறித்து விசாரிக்க ஒன்றிய விளையாட்டு துறை சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் இந்த வன்கொடுமைக்கு காரணமாக இருந்த பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி தற்போது மீண்டும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

”நாங்கள் குற்றவாளிகளைப்போல நடத்தப்படுகிறோம், எங்களை உளவுபார்க்கிறார்கள்” -ஒலிம்பிக் நாயகன் குற்றச்சாட்டு!

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும் FIR பதிவு செய்யப்படாத நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூறி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், எங்களின் தொலைபேசி எண்கள் உளவுபார்க்கப்படுகின்றன. எங்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள் என ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா குற்றம் சாட்டியுள்ளார்.

”நாங்கள் குற்றவாளிகளைப்போல நடத்தப்படுகிறோம், எங்களை உளவுபார்க்கிறார்கள்” -ஒலிம்பிக் நாயகன் குற்றச்சாட்டு!

இது தொடர்பாக பேசிய அவர், ”எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். ஏதோ நாங்கள் குற்றம் செய்ததைப்போல நடத்தப்படுகிறோம். எங்களின் தொலைபேசி எண்கள் உளவுபார்க்கப்படுகின்றன. எங்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள்.கடந்த ஐந்து ஆண்டுகளாக டாடா குழுமம் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு பணம் கொடுக்கிறார்கள். டாடா-வின் பணம் எங்கே போனது ? ரத்தன் டாடாவிடம் நாங்கள் கோரிக்கைவைத்திருக்கிறோம். அவரின் பணம் சரியான இடத்துக்குச் செல்கிறதா என அவர் கண்டுபிடிக்க வேண்டும்?” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories