விளையாட்டு

மீண்டும் மீண்டும் வெளிப்பட்ட வன்மம் - போட்டி முடிந்த பின்னரும் மோதிக்கொள்ளும் கோலி-நவீன் உல் ஹாக் !

இன்ஸ்டா பதிவின் மூலம் லக்னோ வீரர் நவீன் உல் ஹாக், கோலியை மறைமுகமாக தாக்குகிறார் என நெட்டிசன்கள் சமூக வலைதலைங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மீண்டும் மீண்டும் வெளிப்பட்ட வன்மம் - போட்டி முடிந்த பின்னரும் மோதிக்கொள்ளும் கோலி-நவீன் உல் ஹாக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பெங்களூருவில் இந்த அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றிருந்தது.

அப்போது வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

மீண்டும் மீண்டும் வெளிப்பட்ட வன்மம் - போட்டி முடிந்த பின்னரும் மோதிக்கொள்ளும் கோலி-நவீன் உல் ஹாக் !

இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் காஹ்க்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் காஹ்க்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை காம்பிர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி காம்பிரிடம் ஏதோ கூற கோலிக்கும் காம்பிருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

மீண்டும் மீண்டும் வெளிப்பட்ட வன்மம் - போட்டி முடிந்த பின்னரும் மோதிக்கொள்ளும் கோலி-நவீன் உல் ஹாக் !

இதனிடையே நவீன் மற்றும் கோலி இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முயற்சி செய்தார். நவீனிடம் சென்று கோழியுடன் சமாதானமாக செல்ல அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு நவீன் உல் ஹாக் மறுத்து அங்கிருந்து நகர்ந்தார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த போட்டிக்கு பின்னர் குஜராத் - லக்னோ போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் குஜராத் அணி வெற்றி பெற்றது. அப்போது விராட் கோலி குஜராத் அணி வீரர்களை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. .

மீண்டும் மீண்டும் வெளிப்பட்ட வன்மம் - போட்டி முடிந்த பின்னரும் மோதிக்கொள்ளும் கோலி-நவீன் உல் ஹாக் !

இந்த நிலையில் நேற்று பெங்களூர் - மும்பை அணிகள் மோதிய போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது. அப்போது விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர் லக்னோ வீரர் நவீன் உல் அக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனிப்பான மாம்பழம் என குறிப்பிட்டு மும்பை அணி வீரர்களை பாராட்டும் விதமாக ஸ்டோரியை பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கோலிக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே நவீன் உல் ஹாக் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் அந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர். அதே நேரம் இது போல விவகாரத்தில் கோலி போன்ற வீரர்கள் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories