விளையாட்டு

"ஸ்ரீசாந்தை அடித்ததற்கு வருந்துகிறேன்.. நீங்கள் அப்படி இருக்க வேண்டாம்" - ஹர்பஜன் சிங் வேண்டுகோள் !

முன் உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இளம் வீரர்களுக்கு தவறான எடுத்துக்காட்டாக இருந்து விடாதீர்கள் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

"ஸ்ரீசாந்தை அடித்ததற்கு வருந்துகிறேன்.. நீங்கள் அப்படி இருக்க வேண்டாம்" - ஹர்பஜன் சிங் வேண்டுகோள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முன்னதாக பெங்களூருவில் இந்த அணிகள் மோதிய போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றிருந்தது.

அப்போது வென்ற மகிழ்ச்சியில் லக்னோ வீரர் ஆவேஷ் கான் ஹெல்மெட்டை எரிந்து வெற்றியை கொண்டாடியது மற்றும் லக்னோ பயிற்சியாளர் காம்பிர் ரசிகர்கள் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

"ஸ்ரீசாந்தை அடித்ததற்கு வருந்துகிறேன்.. நீங்கள் அப்படி இருக்க வேண்டாம்" - ஹர்பஜன் சிங் வேண்டுகோள் !

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. லக்னோ மைதானம் சமீப சில போட்டிகளாக பேட்டிங் ஆட கடுமையாக இருந்துவந்த நிலையில், பெங்களூரு அணி மெதுவாக ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் கோலி 33 ரன்களும் டு பிளிஸிஸ் 44 ரன்களும், தினேஷ் கார்த்திக் 16 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தவிர இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழக்க பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ அணியும் ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இறுதியில் லக்னோ அணி 19.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

"ஸ்ரீசாந்தை அடித்ததற்கு வருந்துகிறேன்.. நீங்கள் அப்படி இருக்க வேண்டாம்" - ஹர்பஜன் சிங் வேண்டுகோள் !

இந்த போட்டியின்போது பெங்களூரு அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது லக்னோ அணி வீரர் நவீன் உல் காஹ்க்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விராட் கோலி தனது ஷூவை தாக்கி அதில் உள்ள தூசுதான் நீ என நவீன் உல் காஹ்க்கை நோக்கி காட்டியதுபோல காட்சி இடம்பெற்றது.

பின்னர் இந்த போட்டி முடிந்ததும் வீரர்கள் கைகுலுக்கியபோது லக்னோ வீரர் நவீன் உல் காஹ் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டனர். பின்னர் லக்னோ வீரர் கையில் மேயர்ஸ் விராட் கோலியோடு பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை காம்பிர் பேசவேண்டாம் என்பதுபோல இழுத்துச்சென்றார்.இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி காம்பிரிடம் ஏதோ கூற கோலிக்கும் காம்பிருக்கும் இடையே அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் இருவரையும் கட்டுப்படுத்தி அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

"ஸ்ரீசாந்தை அடித்ததற்கு வருந்துகிறேன்.. நீங்கள் அப்படி இருக்க வேண்டாம்" - ஹர்பஜன் சிங் வேண்டுகோள் !

இதனிடையே நவீன் மற்றும் கோலி இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முயற்சி செய்தார். நவீனிடம் சென்று கோழியுடன் சமாதானமாக செல்ல அவர் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு நவீன் உல் ஹாக் மறுத்து அங்கிருந்து நகர்ந்தார்.

இந்த நிலையில், முன் உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இளம் வீரர்களுக்கு தவறான எடுத்துக்காட்டாக இருந்து விடாதீர்கள் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் "விராட் மற்றும் கம்பீருக்கு இடையே என்ன நடந்ததோ அது கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல. 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீ சாந்தை கன்னத்தில் அறைந்ததை நினைத்து இன்றளவும் வருத்தப்படுகிறேன். நான் செய்த தவறை நீங்களும் செய்து விடவேண்டாம்.முன் உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இளம் வீரர்களுக்கு தவறான எடுத்துக்காட்டாக இருந்து விடாதீர்கள். நீங்கள் இருவரும் தங்களது கருத்து வேறுபாடுகளை விரைவில் தீர்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories