விளையாட்டு

அடுத்தடுத்து சொதப்பும் கே.எல்.ராகுல்.. டெஸ்ட் அணிக்கான துணை கேப்டன் பதவியை பறித்த BCCI!

இந்திய டெஸ்ட் அணிக்கான துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து சொதப்பும் கே.எல்.ராகுல்.. டெஸ்ட் அணிக்கான துணை கேப்டன் பதவியை பறித்த BCCI!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராகத் திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் உள்நாட்டுத் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.

கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.

அடுத்தடுத்து சொதப்பும் கே.எல்.ராகுல்.. டெஸ்ட் அணிக்கான துணை கேப்டன் பதவியை பறித்த BCCI!

தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட தொடக்க வீரராக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் 71 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 17 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாக இவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அவருக்குப் பதில் சமீப காலமாகச் சிறப்பாக ஆடிவரும் கில், இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து சொதப்பும் கே.எல்.ராகுல்.. டெஸ்ட் அணிக்கான துணை கேப்டன் பதவியை பறித்த BCCI!

இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம். அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறியிருந்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கே.எல்.ராகுல் பெயர் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த துணை கேப்டன் பொறுப்பு நீக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த துணை கேப்டன் பெயரும் குறிப்பிடப்படவில்லை. பிசிசிஐ-ன் இந்த முடிவு கே.எல்.ராகுலின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி வீரர்கள்

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ் பாரத் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.

banner

Related Stories

Related Stories