விளையாட்டு

BCCI-யின் பணபலத்துக்கு முன் பணிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.. Asia Cup தொடரில் திடீர் திருப்பம் !

ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என்பதில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் தற்போது பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

BCCI-யின் பணபலத்துக்கு முன் பணிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.. Asia Cup தொடரில் திடீர் திருப்பம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

BCCI-யின் பணபலத்துக்கு முன் பணிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.. Asia Cup தொடரில் திடீர் திருப்பம் !

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

BCCI-யின் பணபலத்துக்கு முன் பணிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.. Asia Cup தொடரில் திடீர் திருப்பம் !

அதோடு அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால்,இந்தியாவில் நடைபெறூம் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் தற்போது பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவலின் அடிப்படையில், ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகளில் நடைபெறும் என்றும், இதில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும், இதர போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும், ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

BCCI-யின் பணபலத்துக்கு முன் பணிந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.. Asia Cup தொடரில் திடீர் திருப்பம் !

தற்போது நடைபெறும் ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தான் அணியின் வருமானத்துக்கு மிக முக்கியமானது என்பதாலும், ஒருவேளை ஆசியக்கோப்பையில் இந்திய அணி பங்கேற்காவிட்டால் அது இந்த தொடருக்கு கடும் நிதி சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டி தொடர்பாக இறங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள என்றும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories