விளையாட்டு

பந்தை சேதப்படுத்தினாரா ஜடேஜா ? கொதித்தெழுந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள்.. இந்திய அணியின் விளக்கம் என்ன ?

ஜடேஜா பந்தை சேதப்படுத்தும் விதமாக களிம்பு பூசிக்கொண்டார் என எழுந்த விமர்சனத்துக்கு தற்போது இந்திய அணி விளக்கமளித்துள்ளது.

பந்தை சேதப்படுத்தினாரா ஜடேஜா ? கொதித்தெழுந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள்.. இந்திய அணியின் விளக்கம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

பந்தை சேதப்படுத்தினாரா ஜடேஜா ? கொதித்தெழுந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள்.. இந்திய அணியின் விளக்கம் என்ன ?

இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், கவாஜா ஆகியோரை அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஷமி , சிராஜ் ஆகியோர் வெளியேற்றினர். ஆனால், அதன்பின்னர் களமிறங்கிய லபுசனே மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் ரன் கணக்கை மெதுவாக உயர்த்தினர். 82 ரன்கள் சேர்த்த இந்த இணையை ஜடேஜா காலி செய்தார்.

ஜடேஜாவின் பந்தில் அடுத்தடுத்து லபுசனே, ரென்ஸா, ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழக்க அந்த அணி தடுமாறியது. ஆனால் பின்னர் வந்த ஹாண்ட்காப் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் சிறிது பார்ட்னெர்ஷிப் அமைக்க அதை அஸ்வின் காலிசெய்தார்.

பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களை ஜடேஜா, அஸ்வின் ஜோடி விரைவாக வெளியேற்ற முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

பந்தை சேதப்படுத்தினாரா ஜடேஜா ? கொதித்தெழுந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள்.. இந்திய அணியின் விளக்கம் என்ன ?

அதன்பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. இந்த போட்டியின் முதல்நாளில் போது, முகமது சிராஜ் கொண்டு வந்த ஏதோ ஒரு பொருளை தனது கையால் தொட்டு பந்து வீசும் விரல்களில் ரவீந்திர ஜடேஜா தடவிக் கொண்ட பின்னர் பந்துவீசினார்.

இதனைக் குறிப்பிட்ட சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் ஜடேஜா பந்தை சேதப்படுத்தும் விதமாக எதோ கையில் தடவிக்கொண்டார் என விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது ஜடேஜா கையில் தடவிக்கொண்டு பொருள் வலி நிவாரணி என்பதும், பந்தை மிகவும் இறுக்கமாக பிடித்து வீசியதால் கை விரல்களில் ஏற்பட்ட வலியை குறைப்பதற்காகவே வலி நிவாரணியை ரவீந்திர ஜடஜா கைகளில் தடவிக் கொண்டார் என்றும் போட்டி நடுவரிடம் இந்திய அணி விளக்கமளித்துள்ளார். இதனை போட்டி நடுவருக்கு ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் காரணமாக இந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories