விளையாட்டு

ஆஸ்திரேலிய வீரர்களை கனவிலும் பயமுறுத்தும் அஸ்வின்.. இந்திய மண்ணில் அசரவைக்கும் தமிழக வீரரின் ரெகார்ட் !

இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் முதல் வீரர்கள் வரை மூச்சிக்கு முன்னூறு முறை அஸ்வின் அஸ்வின் என்றே புலம்பி வருவதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய வீரர்களை கனவிலும் பயமுறுத்தும் அஸ்வின்.. இந்திய மண்ணில் அசரவைக்கும் தமிழக வீரரின் ரெகார்ட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இருப்பதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

ஆஸ்திரேலிய வீரர்களை கனவிலும் பயமுறுத்தும் அஸ்வின்.. இந்திய மண்ணில் அசரவைக்கும் தமிழக வீரரின் ரெகார்ட் !

இதற்காக சுழலுக்கு ஏற்ற இந்திய மைதானங்களை போலவே சிட்னியில் மைதானத்தை தயாரித்து ஆஸ்திரேலியா அணி பயிற்சியில் ஈடுபட்டது. இந்தியாவுக்கு வந்த பின்னரும் சுழல் பந்துவீச்சுக்கு தயாராகும் வகையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முழு பயமும் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வினின் மீதே இருக்கிறது என்பது அந்த அணியின் பேச்சின் மூலம் தெரியவந்துள்ளது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் அஸ்வின் வெறும் 22 ஆட்டங்களில் 94 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். அதோடு இந்திய மண்ணில் 51 போட்டிகளில் 312 விக்கெட்டுகளை 21.16 என்ற சராசரியில் எடுத்து மிரட்டியுள்ளார்.

இதனால் அஸ்வினை சமாளிக்க அவரை போலவே பந்துவீசும் பரோடா ரஞ்சி அணிக்கு ஆடும் 21 வயது நிரம்பிய மகேஷ் பிதியா என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரை வரவழைத்து பந்துவீச்சு பயிற்சி எடுத்து வருகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் முதல் வீரர்கள் வரை மூச்சிக்கு முன்னூறு முறை அஸ்வின் அஸ்வின் என்றே புலம்பி வருகின்றனர்.

அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி மேற்கொண்டு வரும் வியூகங்கள் குறித்து பேசியிருந்த முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர், 'பார்டர் கவாஸ்கர் டிராபி தொடங்க இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில், அதற்குள் அஸ்வின் ஆஸ்திரேலியா அணியின் மண்டைக்குள் நுழைந்து விட்டார்' என கிண்டல் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories