விளையாட்டு

சவூதி அரேபியா சென்றும் துரத்தும் சோகம்.. 2 போட்டிகளில் பங்கேற்க ரொனால்டோவுக்கு தடை.. ரசிகர்கள் ஏமாற்றம்!

தடை காரணமாக அல் நாசர் அணிக்காக தனது முதல் போட்டியை ஜனவரி 21 அன்று தான் விளையாட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா சென்றும் துரத்தும் சோகம்.. 2 போட்டிகளில் பங்கேற்க ரொனால்டோவுக்கு  தடை.. ரசிகர்கள் ஏமாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் கால்பந்து பயணம் முழுமையடைந்ததாக பேசப்பட்டது.

ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

சவூதி அரேபியா சென்றும் துரத்தும் சோகம்.. 2 போட்டிகளில் பங்கேற்க ரொனால்டோவுக்கு  தடை.. ரசிகர்கள் ஏமாற்றம்!

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் அல் நாசர் அணி சார்பில் நடத்தப்பட்ட அறிமுக விழாவில் ரொனால்டோ அந்த அணியின் சீருடையை அணிந்து கலந்துகொண்டார்.அதனைத் தொடர்ந்து அவர் பங்கேற்கவிருந்த அல் நாசர் அணியின் முதல் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த போட்டியின் அனைத்து டிக்கெட்டுகளும் முழுமையாக விற்கப்பட்டது.

சவூதி அரேபியா சென்றும் துரத்தும் சோகம்.. 2 போட்டிகளில் பங்கேற்க ரொனால்டோவுக்கு  தடை.. ரசிகர்கள் ஏமாற்றம்!

இந்த நிலையில், ரொனால்டோவால் அல் நாசர் அணி பங்கேற்கும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அல் நாசர் அணியில் இணையும் முன்னர் ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார்.

அப்போது எவர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியின் போது அவரோடு புகைப்படம் எடுக்கவந்த ஆட்டிசம் குறைபாடு கொண்டு சிறுவன் ஒருவரின் கைப்பேசியை ரொனால்டோ தட்டி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த சிறுவனிடம் ரொனால்டோ மன்னிப்பு கோரினார்.

சவூதி அரேபியா சென்றும் துரத்தும் சோகம்.. 2 போட்டிகளில் பங்கேற்க ரொனால்டோவுக்கு  தடை.. ரசிகர்கள் ஏமாற்றம்!

ஆனால், இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் இரண்டு போட்டிகளில் ரொனால்டோ விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடை குறித்த விவரம் அல் நாசர் கிளப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிபா விதியும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புதிய கிளப்பில் சேர்ந்த பிறகும் பழைய தடையை அதைச் செயல்படுத்துவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி அல் நாசர் அணிக்காக தனது முதல் போட்டியை ஜனவரி 21 அன்று தான் விளையாட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories