விளையாட்டு

யாருக்கும் கிடைக்காத பெருமை.. உலகக்கோப்பை வென்றுகொடுத்த மெஸ்ஸியை கௌரவிக்க அர்ஜெண்டினா அரசு திட்டம் !

36 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் நாட்டுக்கு உலகக்கோப்பை வென்றுகொடுத்த அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை கௌரவிக்க அர்ஜென்டினா அரசு முடிவெடுத்துள்ளது.

யாருக்கும் கிடைக்காத பெருமை.. உலகக்கோப்பை வென்றுகொடுத்த மெஸ்ஸியை கௌரவிக்க அர்ஜெண்டினா அரசு திட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

யாருக்கும் கிடைக்காத பெருமை.. உலகக்கோப்பை வென்றுகொடுத்த மெஸ்ஸியை கௌரவிக்க அர்ஜெண்டினா அரசு திட்டம் !

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்ற அர்ஜென்டினா வீரர்களும் திறந்த வெளி பேருந்தில் உலகக்கோப்பையை வைத்து ரசிகர்களிடையே ஊர்வலம் சென்றனர். கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் அர்ஜென்டினா வீரர்களை வரவேற்க அங்கு திரண்டதாக கூறப்படுகிறது

யாருக்கும் கிடைக்காத பெருமை.. உலகக்கோப்பை வென்றுகொடுத்த மெஸ்ஸியை கௌரவிக்க அர்ஜெண்டினா அரசு திட்டம் !

இந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் இந்த வெற்றியை கௌரவப்படுத்தும் விதமாகவும், அந்த அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த அணி தலைவர் மெஸ்ஸியை பெருமைப்படுத்தும் விதமாக அவரது புகைப்படம் அர்ஜென்டினா பண நோட்டுகளில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தியில், அர்ஜென்டினா பணமதிப்பின்படி ஆயிரம் மதிப்புடைய நோட்டில் 1,000 என்பதை மெஸ்ஸியை குறிக்கும் விதமாக 'IO' என அச்சடிக்கவும், அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியை குறிக்கும் விதமாக "La Scaloneta" என்ற வார்த்தையை அச்சிடுவது குறித்து அந்நாட்டு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அர்ஜென்டினா அணி தனது முந்தைய உலகக்கோப்பையை வென்றபோது அதன் நினைவாக பண நோட்டுகள் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இது போன்ற தகவல் உண்மை இல்லை என்றும், ஒரு செய்தித்தாளில் கிண்டலாக வெளியான தகவலே இப்படி உலகம் முழுவதும் பரவியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories