விளையாட்டு

நீ இனி அணிக்கு தேவையில்லை.. ரொனால்டோவை வெளியே அமரவைத்த போர்ச்சுகல்.. முடிவுக்கு வருகிறதா சகாப்தம் ?

ஸ்சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ ஆடும் லெவனில் இடம்பிடிக்காமல் வெளியே அமரவைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீ இனி அணிக்கு தேவையில்லை.. ரொனால்டோவை வெளியே அமரவைத்த போர்ச்சுகல்.. முடிவுக்கு வருகிறதா சகாப்தம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ரவுண்டு ஆப்ஃ 16 சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில் ஆகிய அணிகள் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், நேற்று இறுதி கட்ட ரவுண்டு ஆப்ஃ 16 சுற்று போட்டி நடைபெற்றது.

இதன் முதல் போட்டியில் 2010ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற வலுவான ஸ்பெயின் அணியும், இந்த தொடரில் இதுவரை தோல்வியே தழுவாத மொரோக்கா அணியும் மோதின. மொரோக்கா அணி பெனால்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

நீ இனி அணிக்கு தேவையில்லை.. ரொனால்டோவை வெளியே அமரவைத்த போர்ச்சுகல்.. முடிவுக்கு வருகிறதா சகாப்தம் ?

அடுத்ததாக வலுவான போர்ச்சுகல் அணியும் ஸ்சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இதன் ஆரம்பத்திலேயே உலக ரசிகர்களுக்கும் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜாம்பவான் வீரரும், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் லெவனில் இல்லாமல் வெளியே அமரவைக்கப்பட்டார்.

அதிலும் அவருக்கு பதிலாக 21 வயது இளம்வீரர் ரேமோஸ் களமிறக்கப்பட்டார். இத்தனைக்கும் லீக் போட்டிகள் அனைத்திலும் ரொனால்டோவே ஆடும் லெவனில் இடம்பிடித்திருந்த நிலையில், முக்கிய நாக் அவுட் போட்டியில் அவர் உக்காரவைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீ இனி அணிக்கு தேவையில்லை.. ரொனால்டோவை வெளியே அமரவைத்த போர்ச்சுகல்.. முடிவுக்கு வருகிறதா சகாப்தம் ?

இதனால் போர்ச்சுகல் அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இருந்தே அந்த அணி அசத்தலாக விளையாடியது. அதிலும் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட இளம்வீரர் ரேமோஸ் களத்தில் சிறப்பாக செயல்பட்டு 16 நிமிடத்தில் அபாரமான கோல் ஒன்றையும் அடித்தார்.

பின்னர் 32வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி மற்றொரு கோல் அடிக்க, 50-வது நிமிடத்தில் மீண்டும் இளம்வீரர் ரேமோஸ் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 54-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி இன்னோரு கோல் அடித்தது. அதன்பின் 66 வது நிமிடத்தில் ரேமோஸ் மற்றொரு கோல் அடித்து உலகக்கோப்பையில் ஹட்ட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.

நீ இனி அணிக்கு தேவையில்லை.. ரொனால்டோவை வெளியே அமரவைத்த போர்ச்சுகல்.. முடிவுக்கு வருகிறதா சகாப்தம் ?

இதனிடையே 57-வது நிமிடத்தில் ஸ்சுவிட்சர்லாந்து அணி ஆறுதலாக கோல் அடித்தது. ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி 5-1 என்ற கணக்கில் வலுவான நிலையில் இருந்தபோது ரொனால்டோ மாற்றுவீரராக களமிறக்கப்பட்டார். பொதுவாக அணி வலுவான நிலையில் இருக்கும்போது அந்த அணியின் முக்கிய வீரரை யாரும் களமிறக்கமாட்டார்கள்.

ஆனால், அந்த நிலையில் ரொனால்டோ களமிறக்கப்பட்டது அவர் அணியில் முக்கிய வீரராக இனியும் கருத்தப்படமாட்டார் என்பதை குறிப்பதாகவே அமைந்தது. அதன்பின்னர் ரொனால்டோ அடித்த கோல் ஒன்றும் ஆப் சைடு என மறுக்கப்பட்டது. ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் போர்ச்சுகல் மற்றொரு கோல் அடிக்க ஆட்டம் 6-1 என்ற கணக்கில் முடிவுக்கு வந்து போர்ச்சுகல் காலிறுதிக்கு முன்னேறியது.

நீ இனி அணிக்கு தேவையில்லை.. ரொனால்டோவை வெளியே அமரவைத்த போர்ச்சுகல்.. முடிவுக்கு வருகிறதா சகாப்தம் ?

இந்த போட்டி முழுக்கவே ரொனால்டோ இறுகிய முகத்தோடுதான் காணப்பட்டார். அணி கோல் அடித்தபோது கூட அவர் பெரிய அளவில் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. வெற்றிபெற்றபோதும் அதே பாவனையில்தான் காணப்பட்டார். இதனால் அவரின் முகம் அடிக்கடி கேமராவில் காட்டப்பட்டுக்கொண்டே இருந்தது.

இந்த போட்டிக்கு பின்னர் ரொனால்டோ மீண்டும் அணியில் முதல்நிலை வீரராக களமிறக்கப்படமாட்டார் என்றே எதிர்பாக்கப்படுகிறது. ஏனெனில் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறங்கிய இளம்வீரர் ரேமோஸ் இந்த போட்டியில் ஹட் டிரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். ஏற்கனவே கிளப் போட்டிகளில் ரொனால்டோ புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய அணியிலும் அவருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories