விளையாட்டு

”நாக்-அவுட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வி ஏன்?” -ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு ரோகித் சர்மாவின் பதில் என்ன?

எங்களின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அவர்கள் அதை வெகு சிறப்பாக செய்திருந்தனர் என இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

”நாக்-அவுட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வி ஏன்?” -ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு ரோகித் சர்மாவின் பதில் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் நேற்று மோதின. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று இந்தியா இங்கிலாந்து அணிகள் அடிலைட்டில் மோதின. .

”நாக்-அவுட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வி ஏன்?” -ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு ரோகித் சர்மாவின் பதில் என்ன?

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் வலுவான தொடக்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சிறிது நேரம் களத்தில் நின்ற கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர்வந்த இந்திய அணியின் நாயகம் சூர்யகுமாரும் 14 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா மற்றும் கோலி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை கொண்டு சென்றனர். பின்னர் கோலி அவ்வப்போது பௌண்டரிகள் அடித்து அரைசதத்தை கடந்தார். அரைசதமடித்த கையோடு கோலி ஆட்டமிழக்க இறுதியில் ருத்திர தாண்டவம் ஆடிய ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனால் முதல் 10 ஓவரில் தடுமாறிய இந்திய அணி அடுத்த 10 ஓவரில் 106 ரன்கள் குவித்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.

”நாக்-அவுட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வி ஏன்?” -ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு ரோகித் சர்மாவின் பதில் என்ன?

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ்,பட்லர் ஜோடி சிறப்பான தொடக்கம் அளித்தது. இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த இணை 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் குவித்தது.அதன்பின்னும் அபாரமாக ஆடிய இந்த ஜோடி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்து இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியபோது அவரிடம் இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான தொடர்கள் மற்றும் லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இந்திய அணியால் ஏன் நாக்-அவுட் சுற்றுகளில் வெல்ல முடியவில்லை என ஹர்ஷா போக்ளே கேள்வி எழுப்பினார்.

”நாக்-அவுட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வி ஏன்?” -ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு ரோகித் சர்மாவின் பதில் என்ன?

இதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, "நாக்-அவுட் போட்டிகளில் நிலவும் அழுத்தத்தில் அணியில் ஒவ்வொருவரும் இதற்கு விளையாடி பழக்கப்பட்டவர்கள்தான். அந்த அனுபவத்தை ஐபிஎல் போட்டிகள் கொடுத்துள்ளன.

எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அவர்கள் அதை வெகு சிறப்பாக செய்திருந்தனர். இந்த ஆடுகளம் குறித்து நாங்கள் நன்றாக அறிவோம். வங்கதேச அணிக்கு எதிராக 9 ஓவர்களில் 85 ரன்களை கட்டுப்படுத்தி இருந்தோம். இன்று அதை செய்ய முடியவில்லை" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories