விளையாட்டு

தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை.. FIDE துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!

FIDE துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை..  FIDE துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவதால் உலக அளவில் தமிழ்நாட்டின் பெருமை சென்று சேர்ந்துள்ளது.

இந்நிலையில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE)துணைத் தலைவராகத் தமிழ்நாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை..  FIDE துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த 1 ஆம் தேதி முதல் நாளை 8 தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை..  FIDE துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!

இந்நிலையில் இன்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரிக் டோகோவிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணைத் தலைவரான 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து விஸ்வநாதன் ஆனந்துக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories