விளையாட்டு

டெல்லியில் மதிக்கவே மாட்டார்கள்..சென்னைதான் எப்போதும் BEST.. தமிழ்நாட்டை புகழ்ந்த டென்மார்க் செஸ் வீரர் !

எங்கள் பிரச்சனைகளை டெல்லியில் யாருமே காது கொடுத்து கேட்க மாட்டார்கள். ஆனால் சென்னையில் பிரச்சனை என்று சொன்னால் உடனே அதை தீர்த்து வைக்கிறார்கள் என்று டென்மார்க் செஸ் வீரர் கூறியுள்ளார்.

டெல்லியில் மதிக்கவே மாட்டார்கள்..சென்னைதான் எப்போதும் BEST.. தமிழ்நாட்டை புகழ்ந்த டென்மார்க் செஸ் வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், ஜூலை 28-ம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடரில், 180க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர்.

இந்த போட்டியின் தொடக்க விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. போட்டியில் பங்குபெறும் அனைத்து நாட்டினரும் தங்கள் கோடியை மற்றும் நாட்டின் பெயர் பொருந்திய பதாகைகளை ஏந்தி அணிவகுத்து வந்தனர்.

மேலும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. செஸ் கட்டத்தின் இருக்கும் 8 கட்டங்களுக்கு ஏற்றவாறு இந்தியாவின் 8 மாநிலத்தின் பாரம்பரிய நடனங்களை நடன கலைஞர்கள் நடனமாடி வந்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

டெல்லியில் மதிக்கவே மாட்டார்கள்..சென்னைதான் எப்போதும் BEST.. தமிழ்நாட்டை புகழ்ந்த டென்மார்க் செஸ் வீரர் !
VUGAR AMRULLAYEV

இந்த விழாவில், லிடியன் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சியை வந்திருந்த அயல்நாட்டு போட்டியாளர்கள் தங்களை மெய்மறந்து ரசித்தனர். மேலும் தமிழன் பெருமையை எடுத்துசொல்லப்பட்ட நிகழ்ச்சி வெகுவாக பாராட்டப்பட்டது.

கலைநிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் உபசரிப்பிலும் எந்த குறையும் இல்லை என்று அயல்நாட்டு வீரர்கள் தங்கள் சமூக வலைதளபக்கத்தின் வாயிலாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

2 ஆண்டுகள் திட்டமிட்டு நடத்தவேண்டிய ஒரு தொடரை வெறும் 4 மாதத்தில் வெகுசிறப்பாக நடத்திய காட்டிய தமிழக அரசை பல்வேறு தரப்பினர் பாராட்டி வரும் நிலையில், டென்மார்க் செஸ் ஒலிம்பியாட் அணியின் கேப்டன் சூன் பெர்க் ஹேன்சனும் இந்த தொடரை பாராட்டியுள்ளார்.

டெல்லியில் மதிக்கவே மாட்டார்கள்..சென்னைதான் எப்போதும் BEST.. தமிழ்நாட்டை புகழ்ந்த டென்மார்க் செஸ் வீரர் !

இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இதற்கு முன் இரண்டு முறை செஸ் விளையாட இந்தியாவுக்கு வந்து இருக்கிறேன். எங்கள் பிரச்சனைகளை டெல்லியில் யாருமே காது கொடுத்து கேட்க மாட்டார்கள். ஆனால் சென்னையில் எந்த பிரச்சனை என்றாலும் காது கொடுத்து கேட்கிறார்கள்.

எங்கள் பிரச்சனையை சொன்னால் அதை தீர்த்து வைக்கிறார்கள். இதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டின் உணவு குறித்து பேசிய அவர், இங்க எல்லா உணவும் மசாலா கலந்து நன்றாக இருக்கிறது. சாப்பிடவும் நன்றாக இருக்கிறது. ஆனால் எடை அதிகமாகிவிடுமோ என்பதால் சில விஷயங்களை தவிர்க்கிறேன்." என்று கூறியுள்ளார். அவரின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories