விளையாட்டு

IPL T20 பயிற்சிக்காக சென்னை வந்த தோனி... CSK ரசிகர்களுக்கு இனி ‘தல’ தரிசனம்தான்’!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் அமோக வரவேற்பளித்தனர்.

IPL T20 பயிற்சிக்காக சென்னை வந்த தோனி... CSK ரசிகர்களுக்கு இனி ‘தல’ தரிசனம்தான்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது. சுமார் 2 மாதம் கிரிக்கெட் ரசிகர்களை முழுக்க முழுக்க கட்டிப்போட இருக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்திலேயே சென்னை-மும்பை அணிகள் மல்லுக்கட்ட இருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் உள்ளது.

நடப்பு ஐ.பி.எல் தொடர் ரசிகர்களுக்கு மட்டுமல்ல வீரர்களுக்கும் ஸ்பெஷல்தான். காரணம், களத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி இறங்க இருப்பதுதான்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர் அரையிறுதிக்குப் பிறகு தோனி இந்திய அணிக்காக விளையாடவில்லை. இதனால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஐ.பி.எல் தொடர்தான் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என கூறப்பட்டது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே, சி.எஸ்.கே அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு சென்ற தோனி, அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டு ரசித்தார். இதனை, சி.எஸ்.கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அம்பத்தி ராயுடு, கரண் சர்மா போன்ற வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். ஐ.பி.எல் தொடருக்காக ஏற்கெனவே வீரர்கள் பயிற்சி எடுத்து வரும் நிலையில், தோனியும் பயிற்சியில் இணையவுள்ளார். தோனி பயிற்சி எடுக்கும் ஒவ்வொரு நாளும் சேப்பாக்கத்தில் விழாக்கோலம்தான்.

நீண்ட நாட்களாக களத்தில் தோனியை பார்க்காத ரசிகர்களுக்கு தோனியின் இந்த சென்னை வருகை இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூல் கேப்டனின் ஹெலிகாப்டர் சிக்ஸரை நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories