விளையாட்டு

“அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்” - ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெற்றார் கிறிஸ் கெயில்!

ஓய்வு குறித்து எதுவும் அறிவிக்கவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

“அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்” - ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெற்றார் கிறிஸ் கெயில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய கையோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. நேற்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

முதலில், பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி, கிறிஸ் கெயில் விளையாடிய 301-வது போட்டி ஆகும். அதனைக் குறிக்கும் வகையில் வழக்கமாக அணியும் 45-ம் என் ஜெர்சிக்கு பதிலாக, ''301'' எண் பொரித்த ஜெர்சியுடன் விளையாடினார்.

“அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்” - ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெற்றார் கிறிஸ் கெயில்!

நேற்றைய போட்டியில் கிறிஸ் கெயில் 41 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டமிழந்து செல்லும் பொது இந்திய வீரர்கள் வழியனுப்பி வைத்தனர். இதனால் நேற்று நடைபெற்றதுதான் கெயிலின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அங்கு தான் ட்விஸ்ட்டே.

ஆனால், நேற்றைய போட்டிக்கு பிறகு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள கெயில், ''நான் ஓய்வை அறிவிக்கவே இல்லை. அடுத்த நான் அறிவிக்கும் வரை வரை கிரிக்கெட்டில் வலம் வருவேன்'' என தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருடன் கெயில் ஓய்வுபெறுவார் என கூறப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு எதிராக நடக்க இருக்கும் ஒருநாள் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக கெயில் அறிவித்தார். ஆனால், ”அது போன மாசம், இது இந்த மாசம்” என்பது போல ஓய்வு பெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார். குறைந்தபட்சம், இந்திய அணி வீரர்கள் மரியாதை செய்து வழியனுப்பி வைக்கும் போதாவது கெயில் இந்த உண்மையை சொல்லியிருக்கலாம்.

banner

Related Stories

Related Stories