விளையாட்டு

ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வெல்லுவேன் - தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை !

ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை தெரிவித்தார். 

ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வெல்லுவேன் - தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை விமான நிலையத்தில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் இருந்து வந்த நான் ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வேண்டுள்ளேன்.

தமிழகத்தில் வேலை செய்து தங்கம் வெல்ல வேண்டும் என்று தான் என் விருப்பம் என்று கூறினார். மேலும் என்னை போன்று வரும் ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் எனவும், திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி பேருந்து வசதி கூட இல்லாத கிராமத்தில் இருந்து தான் நான் வந்துள்ளேன். இதுபோன்ற பேருந்து, உணவு, மைதானம் என விளையாட்டு பயிற்சி செய்ய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.அதேபோல் தமிழ்நாடு அரசு உதவி செய்தால், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories