விளையாட்டு

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு வந்த சிக்கல் !

மே மாதம் இறுதியில் இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதில் இந்திய அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு வந்த சிக்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு வந்த சிக்கல் !

உலகக்கோப்பையில் விளையாட இந்திய அணி மே 22ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்படுவதாக திட்டமிட்டிருந்தது. கடுமையான நிதிச்சுமை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் சேவையை முழுமையாக நிறுத்திய நிலையில், வீரர்கள் இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு பதில் அளித்துள்ள ஏர்வேஸ் நிறுவனம், வீரர்கள் செல்வதில் ஏதும் தாமதம் ஏற்படாது என தெரிவித்துள்ளது. இந்திய அணி, முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்துடன் மே 25ஆம் தேதி விளையாடுகிறது.

banner

Related Stories

Related Stories