அரசியல்

பாஜக வழக்கறிஞருக்கு 4 மாதம் சிறை தண்டனை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி - காரணம் என்ன ?

பாஜக வழக்கறிஞருக்கு 4 மாதம் சிறை தண்டனை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி - காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் என்பவர் சென்னை சூளைமேட்டில் சேர்ந்த பி.விக்னேஷ் குமார் என்பவரின் வீட்டில் குடியிருந்து வந்தார். ஆனால் வீட்டின் உரிமையாளர் அவரை வீட்டை காலி செய்ய வலியுறுத்தியும் அவர் வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விக்னேஷ் னக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வரும் வழக்கறிஞர் மோகன்தாஸ் வீட்டை காலி செய்யாதது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மோகன்தாஸ் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாஜக வழக்கறிஞருக்கு 4 மாதம் சிறை தண்டனை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி - காரணம் என்ன ?

எனினும், மோகன்தாஸ் வீட்டை காலி செய்யாத நிலையில், மோகன்தாஸுக்கு எதிராக விக்னேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என் சதீஷ்குமார், நீதிமன்ற உத்தரவை மதிக்காத வழக்கறிஞர் மோகன் தாஸூக்கு நான்கு மாதம் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், அவரை கைது செய்வதற்கான வாரண்ட்டை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories