அரசியல்

"அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்" - அமைச்சர் கே.என்.நேரு !

"அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்" - அமைச்சர் கே.என்.நேரு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புதுக்கோட்டையில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுகவில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் திமுக கட்சி தோழர்கள் உற்சாகமாக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஏழாவது முறையாக திமுக தான் ஆட்சி அமைக்கும். மீண்டும் முதலமைச்சராக மு க ஸ்டாலின் வருவார்.

நிர்வாகிகளிடம் பேசும் போது அரசு சார்பில் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கின்றனர். அதையும் நான் குறித்து வைத்துள்ளேன். அரசு சார்பாக செய்ய வேண்டிய பணிகளை செய்து முடிப்போம்.

"அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்" - அமைச்சர் கே.என்.நேரு !

எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து திமுகவையும் திமுக தலைவரையும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனை தாண்டி தான். பத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி அடைந்துள்ளது. அதேபோல் அடுத்து வரும் சட்டமன்றத்தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும்.

பொதுமக்கள் முழுமையாக தமிழ்நாடு முதலமைச்சருக்குதான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். எந்த காலத்திலும் இதுபோல் திமுக தோழர்கள் உற்சாகமாக இருந்து பார்த்ததில்லை. தற்போது அவர்கள் உற்சாகமாக இருந்து எங்களுக்கும் உற்சாகமூட்டி இருக்கின்றனர். என்னிடம் 41 தொகுதிகளுக்கான பொறுப்பு கொடுத்துள்ளனர். அதில் இரண்டு மூன்று தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் திமுகவுக்கு சாதகமாகத்தான் உள்ளது"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories