அரசியல்

"மீண்டும் மீண்டும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" - அமைச்சர் பொன்முடி உருக்கம் !

"மீண்டும் மீண்டும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" - அமைச்சர் பொன்முடி உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அமைச்சர் பொன்முடி திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில், தான் பேசியது பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

"மீண்டும் மீண்டும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" - அமைச்சர் பொன்முடி உருக்கம் !

இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.

பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories