முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், சென்னையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சி பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். அவை பின்வருமாறு,
“ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நமது முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, குறிப்பாக ஒன்றிய அரசு பரிந்துரைத்த குடும்பக் கட்டுப்பாடு கொள்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களில். முன்மொழியப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையின் தாக்கங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,
இந்த விளக்கக்காட்சியில் ஐந்து முக்கியமான பகுதிகளை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்:
1. மக்கள்தொகை வளர்ச்சியின் போக்கு.
2. தொகுதி மறுசீரமைப்பு பயிற்சிகளின் வரலாறு.
3. தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கான சாத்தியமான சூழ்நிலைகள்.
4. நம்மைப் போன்ற மாநிலங்களில் ஏற்படும் தாக்கம்.
5. நாம் ஏன் கைகோர்க்க வேண்டும்?
இங்குள்ள மாநிலங்கள், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் பல பத்தாண்டுகளாக, குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. நாம் கொள்கைகளை அறிமுகப்படுத்தினோம், விழிப்புணர்வை ஏற்படுத்தினோம், நிலையான மக்கள்தொகை வளர்ச்சிக்கான நாட்டின் நோக்கத்தை அடைந்தோம்.
வேறு சில மாநிலங்கள் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை அனுபவித்தாலும், நாம் பொறுப்புடன் செயல்பட்டோம். இதன் விளைவாக, பல மாநிலங்களை விட மிக முன்னதாகவே மக்கள்தொகை மாற்று விகிதத்தை அடைந்தோம்.
ஆனால், இந்த சாதனைக்கு வெகுமதி பெறுவதற்குப் பதிலாக, இப்போது நமது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் இருக்கின்றோம். இந்த வரைபடத்தில் உள்ள பச்சைக் கோடு, இக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை எவ்வளவு திறம்படக் கட்டுப்படுத்தியுள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகிறது. மாறாக, ஊதா நிறக் கோட்டில், 1971 க்குப் பிறகு மற்ற மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதை நீங்கள் காணலாம்.
இந்திய அரசியலமைப்பின் 82 -வது பிரிவின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் நாடாளுமன்ற இடங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதன்படி, 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடங்களின் எண்ணிக்கை 489 இல் இருந்து 494 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 1961 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு இது 522 இடங்களாக அதிகரிக்கப்பட்டது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போதுள்ள இடங்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்து கடைசியாக 1973 இல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில், தொகுதி மறுசீரமைப்பு பயிற்சியை முடக்குவதற்காக 1976 இல் இயற்றப்பட்ட 42 -வது திருத்தத்தின்படி, 2000 வது ஆண்டு வரை அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு பயிற்சியை முடக்க அனுமதித்து, அரசியலமைப்பு முன்னதாகவே திருத்தப்பட்டது.
இந்தக் காலம் முடிவடைந்ததும், முடக்கத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2026 வரை நீட்டித்து 2002 ஆம் ஆண்டு 84 -வது திருத்தம் இயற்றப்பட்டது, நாம் அனைவரும் அறிந்தபடி, 2002 இல் செயல்படுத்தப்பட்ட முடக்கம் காலாவதியாக உள்ளது, எனவே 2026 இல் என்ன நடக்கும்?
குறிப்பாக, 2026 க்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்துவதற்கான ஒரு உத்தியாக, கோவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் செய்யப்படவில்லை.
2026 க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவை அவர்கள் பயன்படுத்தினால், மக்களவை இட ஒதுக்கீடு வெகுவாக மாறும். இங்குதான் ஆபத்து உள்ளது: அதிக மக்கள் தொகை வளர்ச்சி உள்ள மாநிலங்கள் அதிக இடங்களைப் பெறும், அதே நேரத்தில் எங்களைப் போன்ற மாநிலங்கள் குறிப்பிடத்தக்க அரசியல் பிரதிநிதித்துவத்தை இழப்போம். 2002 இல் விதிக்கப்பட்ட முடக்கம் தொடர்வது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிட ஒன்றிய அரசு தயங்குகிறது.
உண்மையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு, நிறைய குழப்பங்களை உருவாக்கியுள்ளனர். செப்டம்பர் 2023 இல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும், இடங்கள் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.
இருப்பினும், 2023 இல் தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால், தென் மாநிலங்கள் சுமார் 100 இடங்களை இழக்கும் என்று கூறினார். இதற்கிடையில், சமீபத்தில் கோயம்புத்தூருக்கு வருகை தந்த ஒன்றிய உள்துறை அமைச்சர், இந்த தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாடு பாதிக்கப்படாது என்று கூறினார்.
எனவே, நமக்கு முன்னால் உள்ள கேள்விகள். முடக்கம் நீட்டிக்கப்படுமா இல்லையா? இடங்களின் எண்ணிக்கை அப்படியே இருக்குமா ? அல்லது அதிகரிக்குமா ? அதிகரிக்கப்பட்டால், எண்ணிக்கை என்னவாக இருக்கும்?
எந்த அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையே இடங்கள் பகிர்ந்தளிக்கப்படும். அது 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்படுமா அல்லது முன்மொழியப்பட்ட 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்படுமா?
முடக்கம் நீட்டிக்கப்படாவிட்டால், இரண்டு சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
1) தற்போதைய 543 இடங்களை வைத்துக்கொண்டு, 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுபகிர்வு செய்வதன் மூலம் ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பு பயிற்சியைச் செய்யும்.
2) மாற்றாக, இடங்களை 848 ஆக அதிகரிக்கலாம், பின்னர் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு பகிர்ந்தளிக்கலாம்.
இரண்டு சந்தர்ப்பங்களிலும், நாம் நமது பிரதிநிதித்துவத்தை கணிசமாக இழப்போம்.
உதாரணமாக, சூழ்நிலை 1 :
தற்போதுள்ள 543 ஐ தக்கவைத்து 2026 ல் திட்டமிடப்பட்ட, மக்கள்தொகையின் அடிப்படையில் மறுபகிர்வு செய்தால், என்ன நடக்கும்? இதை இங்கே சில தரவுகளுடன் விளக்க விரும்புகிறேன். இன்று, இங்குள்ள மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் 30 சதவீத எம்.பி.க்களை பங்களிக்கின்றன, மக்களவையில் மொத்தம் 543 இடங்களில் மொத்தம் 163 இடங்களை கொண்டு உள்ளன.
தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால், எங்கள் இடங்கள் 163 இலிருந்து 133 ஆகக் குறையும், எங்கள் பிரதிநிதித்துவம் 30 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறையும். எடுத்துக்காட்டாக, கேரளா 8 இடங்களை இழக்கும், இது அவர்களின் தற்போதைய இடங்களில் கிட்டத்தட்ட 40 சதவீதமாகும். மாறாக, சில மாநிலங்களுக்கான இடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
சூழ்நிலை : 2
இடங்களின் எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கப்பட்டால், எங்களுக்கு என்ன கிடைக்கும்? எங்களுக்கு சில கூடுதல் இடங்கள் கிடைக்கக்கூடும், ஆனால், எங்கள் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் மீண்டும் 30 சதவீதத்திலிருந்து 24.7 சதவீதமாகக் குறையும்.
உதாரணமாக, தமிழ்நாட்டின் நிலையைக் கவனியுங்கள். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 848 இடங்கள் மறுபகிர்வு செய்யப்பட்டால், எங்களுக்கு 61 இடங்கள் கிடைக்க வேண்டும். இருப்பினும், 2026 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட மக்கள்தொகையின்படி, எங்களுக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
தமிழ்நாடு மட்டும் சுமார் 12 இடங்களை இழக்கும், கேரளா சுமார் 11 இடங்களை இழக்கும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா இணைந்து சுமார் 11 இடங்களை இழக்கும், மேலும் இங்கு இருக்கும் 7 மாநிலங்கள் ஒரு அணியாக மொத்தம் 44 இடங்களை இழக்கும்.
எனவே, இங்குள்ள சாத்தியமான அச்சுறுத்தல்கள் என்ன? தொகுதி மறுசீரமைப்பு, சில மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தை நியாயமற்ற முறையில் அதிகரிக்கும், அதே நேரத்தில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களுக்கு தேவையற்ற நன்மையை அளிக்கும்.
இங்குள்ள 7 மாநிலங்கள் 65 இடங்களைப் பெற உள்ளன, மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாநிலங்கள் கூடுதலாக 150 இடங்களைப் பெறும். விவசாயம், தொழில்கள், வேலைவாய்ப்புகள், வட்டாரத்தின் வளர்ச்சி தொடர்பான தேசியக் கொள்கைகள் சில மாநிலங்களால் ஆணையிடப்படலாம், நமது தேவைகள் ஒதுக்கி வைக்கபடலாம்.
ஒன்றிய அரசினை அமைப்பது சில மாநிலங்களால் விகிதாச்சாரமற்ற முறையில் நிர்பந்திக்கப்படும். இது நமது மாநிலங்களின் அரசியல் குரலைக் கணிசமாக பலவீனப்படுத்தும். எனவே, இதை ஒன்றிய அரசின் நியாயமற்ற மற்றும் அநீதியான நடவடிக்கை என்று நாங்கள் கூறுகின்றோம்.
இது வெறும் எண் விளையாட்டு அல்ல - இது பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது தங்கள் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க திட்டமிட்ட தாக்குதல்.
அதிக பிறப்பு விகிதங்களைக் கொண்ட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் என்பது, நாடாளுமன்றத்தில் நமது குரல் பலவீனமடைகிறது என்பதாகும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வெற்றி பெற்றதற்காக வெகுமதி அளிக்கப்படாவிட்டாலும், குறைந்தபட்சம் நாம் தண்டிக்கப்படக்கூடாது.
இந்த நடவடிக்கை கூட்டாட்சி அமைப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும். எனவே, நாம் விரைவாகச் செயல்பட வேண்டும், மேலும் நாம் ஒன்றாகச் செயல்பட வேண்டும். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களுக்கான முடக்கத்தை 2026 க்கு பிறகும் நீட்டிக்க வேண்டும் என்று நாம் கோர வேண்டும்.
இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும். மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவம் பராமரிக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும்,
இது எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைப் குறித்தது மட்டுமல்ல - இது இந்தியாவில் ஜனநாயகத்தின் எதிர்காலத்தைப் பற்றியது. எனவே நாம் ஒன்றாக நிற்போம். நமது குரல்களை எழுப்புவோம். நமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நீதியை உறுதி செய்யும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பு செயல்முறைக்காக போராடுவோம்.”