அரசியல்

ராமரை கைவிட்ட பா.ஜ.க : வாக்குக்காக தூக்கிப் பிடிக்கப்பட்டவர் தான் ராமரா?

ராமரை எதிர்க்கிறார்கள், ராமர் கோவிலை இடித்துவிடுவார்கள் என பிரச்சாரம் செய்த பா.ஜ.க, தான் எதிர்பார்த்த தேர்தல் முடிவு இல்லாததால், தற்போது ராமரை புறந்தள்ளியிருக்கிறது.

ராமரை கைவிட்ட பா.ஜ.க : வாக்குக்காக தூக்கிப் பிடிக்கப்பட்டவர் தான் ராமரா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மோடி முதல்வராக இருந்த மாநிலம் குஜராத்தாக இருந்தாலும், மோடியை தேசிய அளவில் அடையாளப்படுத்தியது குஜராத் என்ற போதிலும்,

மோடி அதிகப்படியாக முக்கியத்துவம் தரும் மாநிலம் என்னவோ உத்தரப் பிரதேசம் தான். சொல்லப்போனால், தனது சொந்த மாநிலத்தில் போட்டியிடுவதையே நிறுத்திக்கொண்டு,

உத்தரப் பிரதேசத்தில் தான் போட்டியிடுவேன் என்ற நிலைக்கு வந்திருக்கிறார் மோடி.

அதற்கு, மக்களவையில் உத்தரப் பிரதேசம் பெற்றுள்ள வலுவே காரணமாகவும் அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசம் என்றாலே, பா.ஜ.க.வின் கண்களுக்கு 80 என்ற எண்ணிக்கை தான் முதலில் தென்படுகிறது.

அந்த 80ஐ கைப்பற்றுவதற்கான நாடகம் தான், கடந்த ஓராண்டு காலத்தில் மோடி உத்தரப் பிரதேசத்திற்கு 17 முறை வருகை தந்தது,

உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோவில் நிறுவப்பட்ட போது, அதை தேசிய மற்றும் அரசு நிகழ்வாக நடத்தியது, போன்ற நிகழ்வுகள் என்பது அண்மை நடவடிக்கைகளில் அம்பலப்பட்டுள்ளது.

காரணம், ராமர் கோவில் திறக்கப்பட்ட போது, இந்து அல்லாதவர்களின் மத ஆலையங்கள் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளால் உதாசினப்படுத்தப்பட்டன.

ராமரை கைவிட்ட பா.ஜ.க : வாக்குக்காக தூக்கிப் பிடிக்கப்பட்டவர் தான் ராமரா?

இதற்கு எதிராக மக்கள் எதிர்குரல் தெரிவிக்க முன்வந்த போது,

யோகி ஆதித்யநாத் தலைமையில், உத்தரப் பிரதேச காவல்துறை அரங்கேற்றிய என்கவுண்டர்கள்; மாற்றுச்சிந்தனை பேச்சுகள் எழுந்தாலே, கைது தான் போன்ற அட்டூழிய சூழல்களால் அடக்கி வைக்கப்பட்டன.

அதனால், அப்போதைய அளவில் அமைதி காத்த மக்கள், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், தங்களது பா.ஜ.க எதிர்ப்பினை வாக்குகளின் வழி வெளிப்படுத்தினர்.

இதனால், கடந்த தேர்தல்களில் பா.ஜ.க.வின் கோட்டை என அறியப்பட்ட உத்தரப் பிரதெசத்தில், பெருவாரியான இடங்கள் இந்தியா கூட்டணி வசம் சென்றன.

மோடியின் வெற்றியும் சொல்லுகிற அளவு எண்ணிக்கை கொண்டதாய் இல்லை. குறிப்பாக ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தி நகரின் மக்களே, பா.ஜ.க.வினரை புறக்கணித்தனர்.

அதிகாரத்துவத்திற்கு எதிரான இந்நடவடிக்கையால், துவண்டு போன பா.ஜ.க, அது வரை முழங்கி வந்த ‘ராமர் கோவில், ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கங்களை கைவிட்டு,

தேர்தல் முடிவுக்கு பின், ராமர் என்ற சொல்லையே எடுத்துரைக்க தயங்கி வருகிறது.

இதனால், ‘தேர்தல் ஆயுதம் தான் ராமரா?’ என்ற கேள்வி ஒரு புறம் வலுக்க, மற்றொரு புறம் ‘இது தான் ராமர் மீது பா.ஜ.க வைத்துள்ள உண்மை பாசமா?’ என்ற கேள்வி மறு புறம் வலுக்கத்தொடங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories