அரசியல்

மீண்டும் அமைச்சரான பொன்முடி : தேர்தலுக்கு முன் மோடி சர்க்காருக்கு விழுந்த முதல் அடி : RS பாரதி !

காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வரும் நாடாளுமன்ற தேர்தல் பிஜேபி சர்க்காருக்கு அடி விழும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

மீண்டும் அமைச்சரான பொன்முடி : தேர்தலுக்கு முன் மோடி சர்க்காருக்கு விழுந்த முதல் அடி : RS பாரதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதை எதிர்த்து பொன்முடி சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விசாரணையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார். இதைத் தொடர்ந்து அமைச்சராக க.பொன்முடி பதவியேற்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களால் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

மீண்டும் அமைச்சரான பொன்முடி : தேர்தலுக்கு முன் மோடி சர்க்காருக்கு விழுந்த முதல் அடி : RS பாரதி !

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 24 மணி நேரத்துக்குள் பதவியேற்பது குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கெடு விதித்திருந்தது. இதையடுத்து பொன்முடியை பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கி ஒப்புதல் வழங்கிட வேண்டும் என ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனை திமுக தொண்டர்கள் சென்னை அறிவாலயத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

மீண்டும் அமைச்சரான பொன்முடி : தேர்தலுக்கு முன் மோடி சர்க்காருக்கு விழுந்த முதல் அடி : RS பாரதி !

திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி'க்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலையத்தில் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் ஒன்று கூடினர். தொடர்ந்து அவருக்கு அமைச்சராகப் பதவி பிரமாணம் செய்துவைத்த தகவல் கிடைத்ததும், திமுக தொண்டர்கள் கழக கொடியை ஏந்தியவாரு மேளதாளம் முழங்க பட்டாசுகளை வெடித்து ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி அண்ணா அரிவாலையத்தில் தொண்டர்களுக்கு இணைப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பின்னர் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, "வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. மாநிலத்தின் ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதை இதுவரையில் தட்டிக் கேட்க யாருமில்லை என்ற மமதையோடும் ஆணவத்தோடும் செயல்பட்டு இருந்த ஆளுநர்களுக்கு எல்லாம் ஒரு குட்டு'ஐ வாங்கி கொடுக்கும் வகையில் பொன்முடி வழக்கில் சரியான நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது மோடி சர்க்காருக்கு விழுந்துள்ள முதல் அடி இந்த முதல் அடி தமிழ்நாட்டில் இருந்து துவங்கியுள்ளது. காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வரும் நாடாளுமன்ற தேர்தல் பிஜேபி சர்க்காருக்கு இந்த அடி விழும். தமிழ்நாடு முதல்வர் இன்று வெற்றியுடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories