அரசியல்

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கு அங்கீகாரம் : தேர்தல் ஆணையத்தின் செயலால் அதிர்ச்சி !

பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள அஜித் பவாரின் பிரிவுக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கு அங்கீகாரம் : தேர்தல் ஆணையத்தின் செயலால் அதிர்ச்சி !
-
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கு அங்கீகாரம் : தேர்தல் ஆணையத்தின் செயலால் அதிர்ச்சி !

அதனைத் தொடர்ந்து சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்ததில், அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் அஜித் பவார் மற்றும் சரத் பவார் ஆகியோர் தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என கூறிவந்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் இருதரப்பினரும் முறையிட்ட நிலையில், தற்போது பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள அஜித் பவாரின் பிரிவுக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சரத் பவார் அக்கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் நிலையில், அவர் பின்னால்தான் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களின் நிர்வாகிகள் இருக்கிறார்கள். அதே போல மஹாராஷ்டிராவில் அதிக கட்சி நிர்வாகிகள் சரத் பவாரின் பின்னால் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் இப்படி அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சிவசேனாவில் இருந்து பிரிந்து பாஜகவோடு கூட்டணி சேர்ந்த ஷிண்டே பிரிவுக்கே சிவசேனா சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன் மூலம் நடுநிலைமையாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories