அரசியல்

“வாக்கு செலுத்தும் முன் இதை நினைவில் வையுங்கள்..” : வாக்குறுதியை பட்டியலிட்டு ராகுல் காந்தி பதிவு !

இன்று சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை ராகுல் காந்தி பட்டியலிட்டு நினைவு படுத்தியுள்ளார்.

“வாக்கு செலுத்தும் முன் இதை நினைவில் வையுங்கள்..” : வாக்குறுதியை பட்டியலிட்டு ராகுல் காந்தி பதிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. தொடர்ந்து பிரசாரம் முடிந்து இன்று மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரிலும், 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமிலும் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில் சத்தீஸ்கரில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று முதற்கட்ட பதிவு தொடங்கியுள்ளது. இன்று காலை 7 மணியிலிருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தேர்தலில் இதுவரை பல மக்களும் அந்தந்த வாக்குசாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

“வாக்கு செலுத்தும் முன் இதை நினைவில் வையுங்கள்..” : வாக்குறுதியை பட்டியலிட்டு ராகுல் காந்தி பதிவு !

இந்த சூழலில் காலை 7 மணிக்கே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

" உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது, மீண்டும் ஒருமுறை சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு நம்பகமான அரசாங்கம் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சத்தீஸ்கருக்கு காங்கிரஸ் உத்தரவாதம்:

✅ விவசாயிகளின் கடன் தள்ளுபடி

✅ 20 குவிண்டால்/ஏக்கர் நெல் வாங்கப்பட்டது.

✅ நிலமற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000

✅ நெல் ரூ.3,200 MSP

✅ டெண்டு இலைகளுக்கு ரூ.6,000/பை

✅ டெண்டு பட்டா ரூ.4000/ஆண்டு போனஸ்

✅ 200 யூனிட் மின்சாரம் இலவசம்

✅ காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம்

✅ KG முதல் PG வரை இலவசக் கல்வி

✅ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை

✅ 17.5 லட்சம் குடும்பங்களுக்கு வீடு

✅ சாதி கணக்கெடுப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

“வாக்கு செலுத்தும் முன் இதை நினைவில் வையுங்கள்..” : வாக்குறுதியை பட்டியலிட்டு ராகுல் காந்தி பதிவு !

சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

"1. மிசோரம் - நவம்பர் 07.

2. மத்திய பிரதேசம் - நவம்பர் 17

3. தெலங்கானா - நவம்பர் 30

4. ராஜஸ்தான் - நவம்பர் 23

5. சத்திஸ்கர் - முதற்கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 07 ம் தேதி ;

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு : நவம்பர் 17 ம் தேதி" நடைபெறவுள்ளது என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories