அரசியல்

பாஜகவில் சேர்ந்ததும் ஊழல் குற்றச்சாட்டு நீங்கி அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது -சரத் பவார் விமர்சனம்!

பாஜக அரசில் சேர்ந்ததும் ஊழல்வாதிகள் என்று சொன்னவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டுகள் நீங்கிவிட்டது என சரத் பவார் கூறியுள்ளார்.

பாஜகவில் சேர்ந்ததும் ஊழல் குற்றச்சாட்டு நீங்கி அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது -சரத் பவார் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

பாஜகவில் சேர்ந்ததும் ஊழல் குற்றச்சாட்டு நீங்கி அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது -சரத் பவார் விமர்சனம்!

இந்த நிலையில், தற்போது சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் , "எங்களது கட்சி நிர்வாகிகள் சிலர் வேறு விதமான முடிவை எடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் எங்கள் கட்சியை சேர்ந்த இருவர் மீது ஊழல் குற்றசாட்டுகள் உள்ளதாக மோடி சொல்லியிருந்தார். இப்போது அவர்கள் பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக சேர்ந்துவிட்டதால் அவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டுகள் நீங்கிவிட்டது என்பது தெரியவருகிறது. இதற்காக மோடிக்கு நன்றிசொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories