அரசியல்

கர்நாடகாவைத் தொடர்ந்து ம.பி-யிலும் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கும் பாஜக.. .. வெளிவந்த கருத்து கணிப்பு!

பாஜக ஆட்சி நடத்திவரும் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் கட்சியுடம் ஆட்சியை பறிகொடுக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன

கர்நாடகாவைத் தொடர்ந்து ம.பி-யிலும் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கும் பாஜக.. .. வெளிவந்த கருத்து கணிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாஜவுக்கான தென்னிந்திய கதவுகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கர்நாடகாவில் பாஜக அடைந்த தோல்வி பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என காங்கிரஸ் தரப்பிலும் எதிர்க்கட்சி தரப்பிலும் கூறப்பட்டது.

கர்நாடகாவைத் தொடர்ந்து ம.பி-யிலும் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கும் பாஜக.. .. வெளிவந்த கருத்து கணிப்பு!

இந்த நிலையில், பாஜக ஆட்சி நடத்திவரும் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் கட்சியுடம் ஆட்சியை பறிகொடுக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2018-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது.

ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.

கர்நாடகாவைத் தொடர்ந்து ம.பி-யிலும் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுக்கும் பாஜக.. .. வெளிவந்த கருத்து கணிப்பு!

அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், Navbharat Samachar என்ற நிறுவனம் மத்திய பிரதேசத்தில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார் என்பது குறித்து ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் பாஜகவுக்கு 55 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதோடு இதற்கு முன்னர் வெளிவந்த கருத்து கணிப்புகளிலும் பாஜக ஆட்சியை இழக்கும் என்றே கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories